தமிழ் நாடு
தமிழ் நாடு
வள்ளுவனும் பாரதியும்
வாழுகின்ற திருநாடாம்
தெள்ளமுத வார்த்தைகளைத்
தேனினிலே தோய்த்தெடுத்து
துள்ளுகின்ற தமிழினிலே
துடிப்படனே கவிபாடி
உள்ளம்கவர் கம்பனவன்
உதித்ததிந்தத் திருநாடே!
தேனாகத் தமிழ்பேசும்
திறனுள்ள மக்களிங்கு!
வானென்றும் பொய்க்காத
வளமான பூமியிங்கு!
வீணான வாதங்களும்
வெறும்பேச்சும் கிடையாது!
தூணாக நின்றிடுமே
துணிவுடனே உலகிற்கு!