STORYMIRROR

Manoharan Kesavan

Inspirational

4  

Manoharan Kesavan

Inspirational

பேறுகள் பதினாறு

பேறுகள் பதினாறு

1 min
385

தனையறியும் கல்வியும்

தளிர் போன்றும் வயதும்

துணை நிற்கும் நட்பும்

செழிக்கின்ற வளமையும்

ஓங்குகின்ற இளமையும்

தழைக்கின்ற உடல் நலமும்

முயலுகின்ற பொன்மனமும்

அன்போங்கும் மனையாளும்

புகழ் சேர்க்கும் பிள்ளைப் பேறும்

இறை அருளும் கீர்த்தியும்

நாணயம் கலந்த நா நயமும்

ஈந்துவக்கும் கொடையும்

பெருகுகின்ற மங்களமும் செங்கோலும்

இன்புறுகின்ற வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய்...

அலை ஆழி பேரறிவில் எழில்கொள்

மாயனது தங்கையே...

ஆதி கடவூரின் வாழ்வே !

அமுதீசர் ஒரு பாகம் கலந்திட்ட சுகபாணி!

அருள்வாமி ! அபிராமியே !


நன்றியுடன்...MK🎶🕊️



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational