STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Romance

1  

Kalai Selvi Arivalagan

Romance

நடக்க, நடக்க

நடக்க, நடக்க

1 min
57



மாலைத் தென்றலில் சீராய்

படபடக்க நெற்றியைத் தழுவிடும் 

கருமைநீறக் கூந்தலின்

மெல்லிய ஓசையினில்

நம்மை மறந்து பேசித் தீர்த்த

காலங்கள் மறுபடியும் வருமா?

நம் கைகளுக்குள் 

காதல் உலகினை உணர்ந்த

அந்த நொடிகள் மீண்டும் வருமா?

வாழ்க்கையின் மேடு பள்ளங்களில்

நம்மைத் தொலைத்திட்ட பொழுதுகளை

மீண்டும் பெற்றிட

மறுபடியும் நடப்போமா 

ஒரு காதல் நடை!



Rate this content
Log in

Similar tamil poem from Romance