STORYMIRROR

Vignesh Swamynathan

Abstract

3  

Vignesh Swamynathan

Abstract

நினைவெல்லாம், நீயடி..

நினைவெல்லாம், நீயடி..

1 min
198

நினைவெல்லாம் நீயடி..

நிஜம் தான் நெஞ்சைக் கேளடி..

நீ சொல்லும் ஒரு வார்த்தை

அதுதான் இனி என் வாழ்க்கை..

எந்தன் உள்ளக் கோரிக்கைகள்

உன்னை வந்து சேரலையா??

உன்னால் எந்தன் கோரிக்கைக்கு பதில்

இன்னும் சொல்லத் தோணலையா??

அன்னை தேடும் பிள்ளைமனம் போல்

உன்னை எண்ணி என்கண்கள் தேடும்

இல்லையென்றால் ஏமாந்து போகாதா??

காலம் வந்தால் கல்நெஞ்சும் கரையும்

கண்ணீர் எல்லாம் தன்னாலே மறையும்

கண்ணே!! இதை உன்நெஞ்சம் அறியாதா??

கல்லறைப் பூக்கள் என்பதால் என்ன??

அதன் வாசம் குறைவதே இல்லை..

தோட்ட வாசல் அடைத்து வைத்த போதும்

வண்டு வருகை மறப்பதே இல்லை..

ஓசை இன்றி வார்த்தைகள் இல்லை..

ஆசை இன்றி வாழ்விங்கு இல்லை..

எந்தன் ஆசை கைகூடக்கூடாதா??

நாளை யாரோ உன்நெஞ்சம் அறிவார்..

மாலையிட்டு உன் தோளைத் தொடுவார்..

கண்ணே.. அது நானாகக் கூடாதா??

நீ வார்த்தை சொல்லவும் இல்லை..

என் வழியில் எறிகிறாய் முள்ளை..

உன் மெளனம் என்பதே தொல்லை..

உயிரோடு எரிக்குதே என்னை..

எங்கே நீயடி.. அன்பே!!

அங்கே நானடி...



Rate this content
Log in

Similar tamil poem from Abstract