நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை
நீ காணா நேரத்தில்
நான் எட்ட நின்று பார்க்க...
நான் காணா நேரத்தில்
நீ ஒளிந்திருந்து பார்க்க...
நம்மிருவரின் மனதிற்குள்
காதல் விருட்சமாக வளர...
நம்மிருவரின் மனமும் ஒரே
நேர்க்கோட்டில் பயணித்து செல்ல...
அதை பகிர்ந்து கொள்ளும்
அந்த அழகிய தருணமதில்
நெஞ்சில் மாமழை பொழிகிறதே...