மெழுகு
மெழுகு


நீ மனிதனின் படைப்பு ....
நீ பிறந்த நாளில் முதலாய் நிற்பாய் .....
நீ இறந்த நாளில் இறுதியாய் நிற்பாய் .....
முதலும் நீயே (பிறப்பிற்கு)...!!!
முடிவும் நீயே (இறப்பிற்கு)....!!!
மெல்ல எரிய தொடங்கி
மெதுவாய் அணையும்
உன்னில் ....
வித விதமாய் பரிமாணங்கள் ....
பல வடிவமைப்பு வண்ணங்கள்....
வகை வகையாய் பரிணாமங்கள்....
உன் ஒளியில் ...
மலையும் மரகதமாய் காட்சியளிக்கும்....
இரவும் கவர்ச்சிகரமாய் காட்சியளிக்கும்....
நிலவும் புன்னகையுடன் காட்சியளிக்கும்....
நட்சத்திரமும் முத்தாய் காட்சியளிக்கும்.....
இந்த மகத்தான
இருளை அகற்றும்
சேவை செய்ய ....
நீ ஏன் தற்கொலை
செய்ய வேண்டும் .....
பரந்த உள்ளம்
படைத்த இறைவன்
ஏனோ உனக்கு மட்டும்
பரிசாக தந்தது
ஆயுள் காலம் சில நிமிடம் மட்டுமே ...!!!