கொள்! கொல்!
கொள்! கொல்!
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
“புறப்படு பெண்ணே…
புறப்படு!
அப்போது நீ...
புலியையும்
புற முதுகிடச்
செய்தவள்!
இப்போது நீ...
அரசியலில்
அனைத்தும் சாதிக்க
வல்லவள்!
கல்வியில்
கரை காண
வல்லவள்!
நிலவடைந்து
நீர்நிலம் ஆய்வதில்
வல்லவள்!
கயவர்களின்
கொட்டத்தை ஒடுக்க
வல்லவள்
துஷ்டர்களை
தூள் தூளாக்க
வல்லவள்!
ம்.. புறப்படு!”
‘அம்மா…
இதோ புறப்பட்டு விட்டேன்
எதைப் போட்டுக் கொள்ளட்டும்?
ஆறு பவுன் ஆரமா..?
பத்து பவுன் பதக்கச் சங்கிலியா..?’
“மகளே..
எதுவும் வேண்டாம்!
காமுகக் களவானிகளை…
மிரண்டு ஓட வைக்க
மிளகாய்த் தூளையும்
மருண்டு ஓட வைக்க
மிளகுத் தூளையும்
அரண்டு ஓட வைக்க
கூராயுதத்தையும்
அனைத்திற்கும் மேலாய்..
அறுதியிட்டு உறுதியாய்
காத்து ரட்சிக்கும்
காவலன் செயலியையும்*
உன் பையில் கொள்!
ஆபத்து வந்தால் அந்தப்
பயல்ளைக் கொல்!”
*காவலன் sos App