இவளும் அவனும்...
இவளும் அவனும்...
இவளில் துவங்கியது இந்த காதல்...
இவள் அவன் அழகில் விழ
அவன் தன் பொறுப்பை நோக்கி ஓடினான்
இவள் பின்தொடர்கையில்
"இன்னும் நீ குழந்தை தான்" என தட்டிகொடுத்து சென்றான்
காலம் ஓடின...
அவளது பயம் அவன் வேரோருவளை கரம்பிடிப்பானோ என்று
அங்கு அவன் வறுமை தனிமையை கரம்பிடித்தான்
நீண்ட நாட்கள் ஓடின...
இருவர் கண்கள் மோதிக்கொண்டன
சொல்லாமல் இவளும்;
கண்டுகொள்ளாமல் அவனும்
தேற்ற இவளும்;
தாங்கி கொள்ள அவனும்
கண்ணீர் துடைக்க இவளும்;
காதலை கண்டெடுத்த அவனும்
பாசத்தில் இவளும்;
புரிந்துகொண்டான் அவனும்
உதடுகள் உரச...
அவன் துடிப்பு இவளோடு
இவள் நிழல் அவனோடு
கன்னம் சிவக்க
வண்ணக் காவியமனது
இவளும் அவனும்...