இல்லானின் வஞ்சிகொடி
இல்லானின் வஞ்சிகொடி
அழைப்பில்லா ஆழிக்கு
விருந்தினராக செல்ல
பிழைப்போ மடிவோமா
என்பதை அறியாமல்
மீன்களை பிடிக்க போக
தாலியை சுமந்த அன்பி
நெஞ்சில் கவலையுடன்
வாசலையே நோக்கிருக்க
இல்லானின் வரவிற்காக
காத்திருந்தவள் ஏமாந்து
போக - அதற்கிணையாக
புயல் மழை ஆரவாரமாய்
கொட்டிக் கொண்டிருக்க
உயிர் போகும் வலியை
நொடிபொழுதும் சுமந்து
பேய் மழை கரையோடு
போக - முடிவாக பேதை
யவளின் மனம் தளராமல்
தன்நம்பிக்கையில் தஞ்சம்
கொள்ள மனையாளின்
காதலில் உயிர்த்தெழுந்து
வந்தான் வஞ்சிகொடியின்
மனம் கவர்ந்த வல்லவன்!
#SMBOSS