STORYMIRROR

ANURADHA CHANDRASEKHAR

Abstract

4  

ANURADHA CHANDRASEKHAR

Abstract

என்னை உணர்ந்தேன்

என்னை உணர்ந்தேன்

1 min
310

பதின்ம பருவத்தின் முதல்படி

பரவச எண்ணங்களின் முதலடி

முகம் தெரியா இனியவளின் முதல் சுகந்த நெடி 

பந்தங்களின் நிந்தைகள் நட்ட முதல்செடி 

பாசவலைகளின் முதற்கொடி

என் சிறகை ஒடித்த முதல் தடி 

என் நெஞ்சைப் பிளந்த முதல் வெடி 

உலகம் தந்த முதல் அடி


இதில் எது என் எழுத்தின் முதல் அடி?

தேடுகிறேன்

அது என்னை நான் உணர்ந்த முதல்நொடி

கசப்பை விதைத்தும் இனிப்பாய் முளைத்த செடி

முன்வாசலும் முறைவாசலும் இல்லாத மலர்த்தோட்டம்

ஒவ்வொரு கணமும் என்னைக் கீறி முளைத்த ரணம்


சுமை தாங்க முடியாமல் சுவடாய்ப் பதித்தேனோ?

தேடுகிறேன்

முதல் வலியோ முதல் பரவசமோ 

பிரசவித்த நேரம் அறிவிக்காமல் 

பிறந்து விட்டனவோ?

என் முதல் அழுகையே என்னைத் தூண்டியதோ?


தேடுகிறேன்


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract