என்னை தேடிய நிலவு
என்னை தேடிய நிலவு
முகில்களிடம் கேட்டேன் நிலவு எங்கே என்று?
அதற்கு முகில்களோ நிலவினை போன்ற ஒரு பெண்ணை காண சென்றான் என்றது!
அவள் விண்மீன் போன்ற கண்களும்! முத்துச்சாரல் போல சிரிப்பும்! உடையவள் என்றது
அதற்கு அவள் யார் என்று கேட்டேன்.
உடனே ஒரு ஒளி பிறந்தது
அதில் கண்ணாடி தோன்றியது.
அதில் என் முகம் தெரிந்தது
இவள் தான் அந்த பெண் என்றது ஆனால் அது நான் ஆயிற்றே என்றேன்.
ஆம் அந்த பெண் நீ தான் என்றது அந்த நிமிடம் என் முகம் மிளிர்ந்து கண் சிவந்து உதடுகள் சிரித்தன அந்த நிமிடம் நிலவு வந்தது. உன்னை தேடி தான் நிலவு சென்றது என்று திரும்பி பார் என்றது பின்பு நிலவு என்னை ரசித்து கொண்டு இருந்தது.
