STORYMIRROR

Dhivya K

Fantasy

4  

Dhivya K

Fantasy

காகிதத்தில் எழுதிய கவிதை

காகிதத்தில் எழுதிய கவிதை

1 min
1

அந்தி சாயும்
வேளையில் கடற்கரை
ஓரம் நடந்தேன்
அங்கு என் மனதில்
தொலைத்த ஒரு
மாதவன் அங்கே
பூக்களுடன்
வந்தான். கண்களால்
கதைத் தோம்.
ஈராண்டுக்கு முன்பு
ஆயிரக்கணக்கான
வார்த்தை பேசிய
நாங்கள் இன்று
மௌன மொழியில்
ஆழ்ந்தோம். நேரம்
கடந்தது. இருவரும்
சிறு புன்னகையுடன்
வேறு திசையில்
சென்றோம். அந்த ஈர
மண்ணில் கால் தடத்தை
அழிக்க அலைகள்
ஓடி வந்தது. ஆனால்
அதற்கு முன்னே ஒரு
காகித துண்டு. அதிலே
பாதியில் விடப்பட்ட
கவிதை. அந்த
கவிதை பூர்த்தி செய்ய
நாங்கள் இருவரும்
இணைந்தோம்.
இயற்கை எங்களுக்கு
காகிதத்தில் காதல்
எழுதியது


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Fantasy