STORYMIRROR

Dhivya K

Fantasy

4  

Dhivya K

Fantasy

நிலவின் காதலி

நிலவின் காதலி

1 min
3

ஓ நிலவே!
உன் அமைதிக்கு
காரணம் என்ன?
என்று நிலவிடம் கேட்ட
போது; அது கூறிய பதில்.
ஓ பெண்ணே
நமக்கு மிகவும்
பிடித்தமானவரை
காணும் போதும்
ரசிக்கும் போதும்
அமைதியாக தான்
இருக்க வேண்டும்
என்றது. அதற்கு நானோ
இந்த உலகமே உன்னை
ரசிக்கும் போது நீ யாரை
ரசிக்கிறாய் என்ற
போது என் கண்ணில்
இருப்பவள் தான் என்
காதலி அவளை தான்
ரசித்து கொண்டு
இருந்தேன் என்றது.
ஆனால் எதிரில் நான்
இருந்ததால் கண்ணில்
நான் இருந்தேன்.
இது என்ன என்ற
போது ஆம் நீ தான் என்
காதலி. உன்னை தான்
நான் நாள்தோறும்
அமைதியாக ரசித்து
கொண்டு இருந்தேன்.
மாதத்தின் மூன்று நாள்
உன்னை பார்க்காமல்
தவிக்கிறேன்.
பிறகு மீண்டும்
பிழைக்கிறேன்.
உன்னை நேசிக்கிறேன்
என்று கூறியது. என்
மனமோ வெட்கத்தில்
சிரித்தது


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Fantasy