STORYMIRROR

POORNIMA S

Inspirational

4  

POORNIMA S

Inspirational

சூழலே, சுற்றுச் சூழலே

சூழலே, சுற்றுச் சூழலே

1 min
390

அரியவைகளை நிகழ்த்திட

அற்புதங்களை படைத்திட

ஆடம்பரம் இல்லா இயற்கை

ஆச்சர்யம் கலந்த மூலிகை

இன்னதென்று அறியாமல்

இன்னலிலும் தவித்து

ஈரமது இல்லாத விலங்குகளையும்

ஈகை செய்யும் வனமே

உண்மையை உரைத்திட

ஊண் உயர்களும் உணர்ந்திட

எண்ணிய எண்ணமெல்லாம்

ஏற்றுவித்த கொடிகளெள்ளாம்

ஐயமதை கொண்டு

ஐங்கரனைத்(யானை) தொழுது

ஒற்றுமையுடன் நின்று

ஒன்று கூடி காக்கும் வனமே

ஓங்கிய பசுமையும்

ஓங்காரமாய் மனதிலிருக்க

ஔடதமாய் வாழ்ந்திடும் பறவைகளும்

ஒளடம்பரமாய் ஆடிடும் இடமே

அஃதாகிய வனமே

இஃதே நகருதே இசையினிலே!



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational