செல்கிறாய்
செல்கிறாய்
நடந்து செல்கையில் கவனித்து செல்கிறாய்,
கவனித்து செல்கையில் நிதானித்து செல்கிறாய்,
நிதானித்து செல்கையில் உள்வாங்கி செல்கிறாய்,
உள்வாங்கி செல்கையில் கடத்தி செல்கிறாய்,
கடத்தி செல்கையில் அணைத்து செல்கிறாய்,
அணைத்து செல்கையில் விழுங்கி செல்கிறாய்,
விழுங்கி செல்கையில் உணர்த்தி செல்கிறாய்,
உணர்த்தி செல்கையில் தான் புரிந்தது,
இது காதல் என்று......

