சாமி
சாமி
ஊரே கூடி நிக்க
உருமி சத்தம் எதிரொலிக்க
கூடி அமர்ந்த கூட்டத்திலே குதித்தெழுந்தான் கருப்பசாமி
வீச்சருவா வேண்டுமென்றான் விபூதிய அள்ளி எறிந்தான்
விண்ணும் மண்ணும் வியந்திடவே வீரவசனம் பேசி நின்றான்
அருவா ஆட்டத்துல
கொடுவா மீசை எல்லாம்
குனிந்து நின்னதையா
கும்புடு போட்டதையா
சாமி இல்லையினு
வெடப்பா திரிஞ்சவங்ய
கருப்பன் காலுலதான்
கெடையா கெடந்தாங்ய
அந்த ஒரு நிமிடம்
அருளும் வந்ததையா
ஆன்மீகம் எங்களுக்கு அருள்வாக்குத் தந்ததையா
நம்புனா இருக்கும் சாமி
நம்பாட்டி கிடக்கும் சாமி
இவக மட்டும் இல்லையினா மனுசனுக்கு ஏது பூமி