ஒரு எட்டாம் வகுப்பு மாணவனுக்கு என்ன தெரியும்
அரசியல் தெரியுமா
ஐம்பதாண்டுகால வரலாறு
தெரியுமா
இருந்தும் ஏதோ ஒன்று
உந்துகிறது
அன்று எழுதுகிறான்
தன் முதல் மேடையின்
முதல் கவிதையை
உன் பிறந்தநாளுக்காக ,
" கருமவீரர் காமராசர்
இவர் அரசியலில் ஒரு வியாசர்
சத்துணவை ஆரம்பித்தார்
நம் பசியை ஓரம் வைத்தார்"
இவ்வாறே தொடர்கிறான்
எவ்வாறு மறக்கமுடியும்
அந்த கைதட்டல்கள் இன்னமும்
அவன் காதுகளில் ,
உன் பிறந்தநாளென்று
எழுதினானா
தன் கவிதை பிறந்த-நாள் என்று
எழுதினானா
கல்விக்கண் திறந்தநாளென்று
எழுதினானா
தெரியவில்லை ,
இன்னமும் எழுதுகிறான்
நீ கொடுத்த கல்விக்கு
நன்றிக்கடன் பட்டிருப்பதால் !!