எங்கே என் மொழி ?
எங்கே என் மொழி ?
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
1 min
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
70
படிப்பறிவு இல்லாதவனும்
பாடலை ரசிப்பான் ,
வெறும் கவி வழி
சொன்னால் புரியாது என்பதால்
செவி வழி சென்றது
என் செம்மொழி ,
இன்று கவியும், செவியும்
காய்ந்து கிடக்கிறது
என் மொழியை மீட்க
என்னதான் வழி ?
நா.முத்துக்குமாருடன்
நல்ல தமிழ் வரிகள்
முடிந்து போனது
இன்றைய பாடலாசிரியர்களிடம்
தமிழ் மடிந்துபோனது !
முனுமுனுக்ககூட
வரிகள் இல்லாமல்
இப்போதைய இசை என்கிற
இரைச்சலில் , உயிரில்லாத
உடம்பாய் பாடல்கள்
நான் பழமைவாதியானாலும்
பரவாயில்லை , நல்ல வரிகள்
கொண்ட இசையே
என் தேடல்கள் !
பள்ளி இல்லா காலத்தில்
கோணல்மாணலாய்
எழுதியவன் கூட
பகுத்தறிவாளன் ஆனான்
சொல்லிக்கொடுக்க ஆசிரியர்
கிடைத்த காலத்தில்
பேனா பிடித்தவன்
எழுத்தறிவாளன் ஆனான்
தள்ளி வைத்துக்கொள்ளலாம்
தமிழை , என்ற வாய்ப்பை வழங்கியதால்
மெத்த படித்த
டிஜிட்டல் பிள்ளைகள் இன்று
பகுத்தறிவாளனும், எழுத்தறிவாளனும் எழுத தெரியா
அறிவுக்குருடன் ஆனான் !
தலை நிமிர்ந்து பேசலாம்
கோவை மதுரை,நெல்லை,
தஞ்சை - ன் வட்டார தமிழை
ஆனால் தலைவிதியே என
எண்ணுகிறேன் இந்த அண்ணைத் தமிழை அழிக்கும் தலைநகரத்து சென்னை- தமிழை
என்னாத்த சொல்ல
அன்னாத்த அழிச்சுப்புட்டான் !!
தேர்வுச் சுமை குறைப்பு
என்ற காரணம் காட்டி
மொழிப்பாடத்தின் இலக்கணம்
சொல்லித்தரும் இரண்டாம்தாளை
நீக்கிவிட்டனர்
வேரில்லா மரமாய் பிள்ளைகளின்
எதிர்காலத்தை ஆக்கிவிட்டனர் !
இவ்வளவு சொல்லும் நானும்
தமிழ் கொல்லும் குற்றவாளிதான்
பள்ளியில் பக்கம் பக்கமாய்
எழுதினேன்
கல்லூரியில் பரீட்சைக்கு மட்டும்
எழுதினேன்
இப்போதோ பழக்கம்
விட்டுப்போக கூடாதென
எழுதுகிறேன் ,
தலைமுறையாய் வளர்ந்து வந்து
தளர்ந்து கிடக்கிறதே
'எங்கே என் மொழி '
அடுத்ததலைமுறைக்கு ?