அன்பு மகனுக்கு !!!
அன்பு மகனுக்கு !!!
தாயோட பாசத்த விட பெருசு ஒன்னும் இல்ல
இது கடைசி வரைக்கும் உணரவில்ல பெத்த புள்ள;
சோறு கஞ்சி ஆக்கி வெச்சு பொலப்புக்கு ஓடுவா,
ராத்திரி வீடு வந்ததும் புள்ளைய தேடுவா,
பட்டினியில் வாடினாலும் பசிய ஆத்துவா,
நோயில கிடந்தாலும் நல்லா பாத்துப்பா,
மனசுல கஷ்டத்த வச்சுகிட்டு புன்னகையை காட்டுவா ,
ஆசையா ஒரு பொருளா கேட்டா காசு நீட்டுவா;
நாலு எழுத்து படிக்கல,பள்ளிக்கூடம் மிதிக்கல,
அன்பு பாசம் நடிப்பில்ல ,இது ஒன்னும் புதுசில்ல,
பெத்த புள்ள படிக்கனும், நாலு பேரு மதிக்கனும்
கனவு ஜெயிக்கனும் ,கஷ்டம் விலகனும்
இது எல்லா நடக்கனும்,கடவுள வேண்டுவா;
வேண்டுதலும் பலிச்சது பெத்த புள்ள சிரிச்சது,
கண்ண மூடி தூங்குறேன் என் ராசா கேட்டுக்கோ;
''எப்பலாம் கஷ்டம் வருதோ என்னை கொஞ்சம் நெனச்சுக்கோ,
என் பிரிவ பத்தி வருந்துவத நீ நிறுத்தனும்
அடுத்த ஜென்மத்தில் நான் உன் புள்ளையா பொறக்கனும்''.