STORYMIRROR

இந்திரா சண்முகானந்தன்

Abstract

3  

இந்திரா சண்முகானந்தன்

Abstract

காதல் தோல்வி

காதல் தோல்வி

1 min
634

உப்பு காற்று வீசும் கடற்கரை நான் ,

உடமைகளை விட்டு தவிக்கும் அகதி நான்,

கோடை காலத்தில் தண்ணீருக்கு ஏங்கும் செடி நான்,

மன குமுறல்களை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறேன்;

மணிக்கணக்கில் உன்னை எண்ணி அழுகிறேன்,

மழைகளில் குடையென வாழ்கிறேன்,

நிழலை நிஜமாய் நினைத்து நோகிறேன்,

என் காலத்தை உன் காலடியில் முடித்துவிட்டேன்;

நீ புண்படுத்திய பின்னும் புண்சிரிப்பால் மலர்கிறேன்.

நீ என்னை விட்டு சென்ற பிறகும்,

இலையுதிர் கால மரங்கள் ஆகிறேன்.

உனது மனைவிக்காக எப்போதும் வேண்டுகிறேன்

அவளையும் நீ விட்டு செல்லக் கூடாது என்று!!!



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract