STORYMIRROR

இந்திரா சண்முகானந்தன்

Abstract

5  

இந்திரா சண்முகானந்தன்

Abstract

சாலையோர தேனீர் கடை

சாலையோர தேனீர் கடை

1 min
529

கதிரவனின் செங்கதிர்கள் வானத்தை சூழ,

சிறந்த இசையை இயற்கை வாயிலாக பறவைகள் சொல்ல,

தென்றலின் தீண்டலால் இலைகளின் அசைவுகள்;

சற்று தொலைவில் 'செய்திகள் வாசிப்பது' என ஒலியும்

காற்றின் வருடலால் ஓலையின் சத்தமும் சேர,

செங்கதிர்கள் கண்ணாடி கோப்பையை ஊடுருவ

காலை பொழுதை அழகாக்கியது தேனீர்கடை ;

அரசியல் பேசி வழிபோக்கர்களின் வழிகாட்டியாக தேனீர்கடை அன்பர்கள்,

வருடங்கள் கடந்து ஆர்வத்துடன் ஊருக்கு சென்றேன்.

அதிர்ச்சி! நெடுஞ்சாலைத்துறையால் காணாமல் போனது,

தேனீர்கடை மட்டுமல்ல என் நினைவுகளும் தான்!!!



ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar tamil poem from Abstract