STORYMIRROR

இந்திரா சண்முகானந்தன்

Drama

3  

இந்திரா சண்முகானந்தன்

Drama

எனக்குள் நீ

எனக்குள் நீ

1 min
232

உனது விழியில் எனது இதயத்தை தொலைத்தேன்

உன்னை தினமும் கண்டு எனது பொழுதை கழித்தேன்

நீ எங்கே சென்றாலும் நிழலாய் தொடர்ந்தேன்

உன் பார்வை என் மீது விழாதா என்று அழுதேன்

உன்னையே நினைத்து முப்பொழுதும் கரைந்தேன்

நாட்கள் செல்ல செல்ல என்னையே நான் மறந்தேன்

ஒருதலை காதல் வெற்றி பெறாது என்பதை உணர்ந்தேன்

உன்னுடன் வாழ்ந்தது போல் எண்ணி கனவில் மிதந்தேன்

தண்ணீர் இல்லாத வரண்ட பாலைவனம் போல

உன்னையே நினைத்து வாழ்கின்றேன்

உனது ஒரு துளி மழைநீராகிய காதலை கொண்டு

எப்போது நீ என்னை அணைப்பாய் என்று.



Rate this content
Log in

Similar tamil poem from Drama