கண்ணாடி
கண்ணாடி
1 min
466
குழந்தை பருவம் முதல்
பார்த்துப் பார்த்து ரசித்தாயே !
உன் முகம் கண்டு முகம் சுளிப்பேனோ ?
பல தருணங்கள் ஒன்றாய்
பழகி மகிழ்ந்தோமே !
நீ அழும்போது நான் சிரிப்பேனோ ?
அச்சம் மறக்க
ஓடோடி வந்தாயே !
இனி அச்சத்தோடு செல்வாயோ ?
என்னைக் கண்டால்
உன்னைக் காண்பாயே !
நான் இல்லையேல் ,
உன்னை எதிலே அழகாய் காண்பாயோ ?
உன்னை அழகாய்
பிரதிபலிப்பேனே !
சுடரொளி வீசிச் செல்வாயோ ?
என்றும் நான் உன் முன்னாடி !
துணையாய் இருக்கும் கண்ணாடி !