STORYMIRROR

SANTHOSH KANNAN

Romance

3  

SANTHOSH KANNAN

Romance

அணிலாடும் முன்றில்

அணிலாடும் முன்றில்

1 min
210

அதிகாலைச் சூரியன் அழகாய் உதித்ததே

அழகான மலர்கள் அன்பாய்ச் சிரித்ததே

அணிலாடும் முன்றில் அடடா ஈர்த்ததே

அவள்வரும் பாதையில் காதல் பூத்ததே


பார்வை எல்லாமே பாவை அவள்மீதே

பாதை நெடுந்தூரம் கடந்தும் காண்கிறதே

பதற்றம் எனக்குள்ளே ஏனோ வருகிறதே

பார்த்ததும் இதழ்கள் விரிந்தே சிரிக்கிறதே


அருகே வந்தாளே அழகாய் நின்றாளே

உருகிப்போய் நான் எனையே மறந்தேனே

கண்ணும் அடிக்குதே காதல் துடிக்குதே

மண்ணை மறந்து விண்ணில் பறக்கின்றேன்


குவியிதழ் விரித்துப் பேசத் தொடங்கினேன்

குமரியவள் கண்ணைப் பார்த்து அடங்கினேன்

அவளோட விழியில் நானே தெரிகிறேன்

இதுபோதும் என்று சற்றே ஒதுங்கினேன்


காதல் செய்தாலே கரத்தைப் பிடிக்கணுமே

மனதைக் கொடுத்தாலே மணமும் செய்யணுமே

பார்க்கும் விழியெல்லாம் ஈர்ப்பது இயற்கைதான்

பருவம் இதுவென்றே பக்குவம் அடைகின்றேன்.



Rate this content
Log in

Similar tamil poem from Romance