அழையா விருந்தாளி
அழையா விருந்தாளி
அதிகாலையிலே விழித்தேன், கண்களை திறந்தேன்
அன்று போல் என்றும் நான் உணர்ததிலில்லை,
வெப்பம் சூழ்ந்து என்னை வாட்டி வதைத்தது,
சற்றே களைத்து போனேன் நான்.
பருவநிலை மாற்றம் இதை நான் என்ன செய்ய முடியும்
பதற்றம் இன்றி என் வேலைகளை செய்ய துடங்கினேன்
வினாடிகள் நகர்ந்தன நொடிகள் நகர்ந்தன ஒரு
மாற்றமும் இல்லை எனக்கும் வெப்பத்துக்கும்.
மூட்டைகளை ஓன்றின் பின் ஒன்றாக சுமந்து
கிடப்பில் இருந்து கடைக்கு சுமந்து வந்தேன்
ஒவ்வொரு அரை மணிநேரத்தில் சற்றே
வியக்கவில்லை ஓய்வுஎடுக்க நாழியில்லை.
மாலை பொழுது அந்நேரத்தில் மெல்ல இனிமையான
காற்று வீச தொடங்கியது ஓயாமல் வீசியது
மேகம் இடித்தது மின்னல் வெட்டியது சிலுசிலுவென
கார்மேகத்தில் இருந்து மழை பொழிய துடங்கியது
அழையா விருந்தாளி போல!
என் கண்கள் நனைந்தது மழைத்துளி என்
மனதையும் நனைத்து விட்டது!
அழையா விருந்தாளி வந்தால் மனம் மகிழும்
இயற்கை அன்னையின் அழையா விருந்தாளி வந்தால்
நாமும் இவ்வையகமும் மகிவோம்.