ஆணின் நாணம்
ஆணின் நாணம்
பெண்ணிடம் மட்டுமே
நாணம் உள்ளதோ...
இல்லையே
ஆணுக்கும் உள்ளதே...
அவனுக்கே உரித்தான...
உரிமையான பெண்ணை
காணுகையில்...
ஆணின் உள்ளிருந்து
நாணம் எட்டிப் பார்க்குமே...
அவனின் ஒவ்வொரு
உரிமையான செய்கையிலும்
பிரத்யேக நாணமும் கலந்திடுமே...
அவனின் நாணத்தை...
அந்த பெண் மட்டுமே
கண்டு கொள்வாள்....
அதையும் ரசித்திடுவாள்...

