உனக்குள் ஒன்று.
உனக்குள் ஒன்று.
தன் வண்ணத்தை மறந்த வண்ணத்துப்பூச்சி
வானவில்லை வட்டமிடுகிறது
தன் தேனை பருகாத மலர்கள்
வான்துளியை எதிர்பாக்கிறது
தன் உயரத்தை உணராத சிகரம்
கரையும் மேகத்தை மெச்சுகிறது
இங்கு ஒரு தன்மை அறியா நிழல்
இருளில் சாகிறது
தனக்குள் இருக்கும் ஒளியை மறந்து
வேறொன்றை நாடி வாழ்கிறது.