Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambaranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambaranathan N

Classics Fantasy Inspirational

விவசாயிகளின் வாரிசுகள்

விவசாயிகளின் வாரிசுகள்

1 min
224


கருமையான மேகத்தினை ஏக்கமாகப் பார்த்தனர் விவசாயிகள்!

கடைமடை விவசாயப் பகுதிக்கு மழை நீர் வராதா என்று ஏங்கினர் விவசாயிகள்!

கவலையுடனும் கண்ணீருடனும் ஆகாயத்தினை நோக்கினர் விவசாயிகள்!     

கம்பங்கூழினை உண்டு பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியுமா என்று மழையை எதிர்பார்த்தனர் விவசாயிகள்! 

கரிசல் மண்ணில் மழை பொழியும் ஏக்கத்தில் விதைகளை விதைத்து விட்டுக் கவலையுடன் காத்திருந்தனர் விவசாயிகள்‌!

கதிர் அறுக்கும் பொழுதும் விவசாயம் செய்யும் பொழுதும் அருகிலே இருந்து விவசாயத்தினை நன்கு கற்றுணர்ந்தனர் விவசாயிகளின் வாரிசுகள்! 

கல்வியறிவு பெற்ற விவசாயிகளின் வாரிசுகள் பொருள் ஈட்ட நகரத்திற்குச் சென்றனர் வறுமையில் வாடிய விவசாயிகளுக்காக!

கடினமான துன்பங்களை மட்டும் அனுபவித்த விவசாயிகளின் வாரிசுகள் நகர வாழ்க்கைக்கு மாறிக்கொண்டே வருகின்றனர் விவசாயிகளுக்காக!

களத்து மேட்டில் உழைக்க வேண்டிய விவசாயிகளின் முகங்கள் கடன் சுமையால் வாடி வதங்கிப் போயின! தான் செய்த விவசாயத்திற்காக! 

கள்ளம் கபடமற்ற விவசாயிகளின் வாரிசுகள் தினக்கூலிகளாக மாறிப் பணிபுரிந்தனர் பொய்த்துப் போன விவசாயத்திற்காக!

கண்களில் கண்ணீருடன் நகரத்தில் வேலை தேடி அலையும் விவசாயிகளின் வாரிசுகள் பணம் சேர்ந்ததும் கவலை கொண்டனர் தங்களின் விவசாயத்திற்காக!

கன மழை பொழிந்தவுடன் மீண்டும் வந்துவிட்டனர் ! தாம் செய்ய வேண்டிய விவசாயத்திற்காக!


Rate this content
Log in

Similar tamil poem from Classics