விவசாயிகளின் எதிர்பார்ப்புகள்
விவசாயிகளின் எதிர்பார்ப்புகள்
விவசாய நிலத்தில் காலையிலிருந்து மாலைவரை வயலில் பாடுபடும் விவசாயி!
விவசாய நிலத்தில் உச்சி வெய்யிலில் கதிரவனை நேரடியாக எதிர்கொள்ளும் விவசாயி!
விவசாய நிலத்தில் சுட்டெரிக்கும் வெய்யிலில் கடினமாக உழைத்துக் கருத்துப் போன விவசாயி!
விவசாய நிலத்தில் விவசாய வேலையின் பொழுது இடறுகள் செய்யும் எலிகளுக்கும் மற்றும் பாம்புகளுக்கும் சற்றும் அச்சம் கொள்ளாத விவசாயி!
விவசாய நிலத்தில் கடுமையாக உழைத்து வாடிய முகத்துடன் நல்ல ஆரோக்கியமான உடலமைப்பைக் கொண்டு நடந்து வருகின்ற விவசாயி!
விவசாய நிலத்தில் எப்பொழுதும் கரிசல் காட்டுப் புழுதி மண்ணின் கரைப் படிந்த ஆடையினை உடுத்தி உழவுப் பணியில் ஈடுபடும் விவசாயி!
விவசாய நிலத்தில் மண் வெட்டியினைக் கொண்டு வரப்பு வெளிகளைச் சமன் செய்து நீர்ப்பாசனம் செய்து வருகின்ற விவசாயி!
விவசாய நிலத்தில் அறுவடைக்குத் தயாரான பயிர்களைக் கண்டவுடன் விவசாயக் கடன் சுமைக் குறையும் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட விவசாயி!
விவசாய நிலத்தில் விவசாய அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் பணத்தில் ஆண்டு முழுவதும் பசி இல்லாமல் வாழலாம் என்று கனவுக் கண்ட விவசாயி!
விவசாய நிலத்தில் விவசாயப் பயிர்கள் நன்றாக விளைந்தவுடன் இரண்டு நாட்களில் அறுவடைக்கு நாள்குறித்து விவசாயி!
விவசாய நிலத்தில் விவசாய அறுவடைக்கு முன்னே வடகிழக்குப் பருவ மழையின் மூலம் புயல் தாக்கிப் பாதிப் பயிர்கள் நீரில் மூழ்கி வருவதனைக் கண்டுக் கண்கள் கலங்கி நின்ற விவசாயி!
விவசாய நிலத்தின் விவசாயத்திற்காகக் கடன் வாங்கிச் செலவு செய்தது வீணாகிப் போய் விட்டதே என்று கவலையில் கண்ணீர் விட்ட விவசாயி!
விவசாய நிலத்தில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கண்ணும் கருத்துமாக இருந்தது வீணாகிப் போய் விட்டதே என்று அழுது புலம்பிய விவசாயி!
விவசாய நிலத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் விதமாக வடகிழக்குப் பருவ மழை நின்று வெள்ள நீர் முழுவதும் வடிந்தது! இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த விவசாயி!
விவசாய நிலத்தில் விவசாய பணியாளர்களை உடனடியாக அழைத்துச் சென்று விவசாயப் பயிர்களை ஆனந்தமாக அறுவடைச் செய்த விவசாயி!
விவசாய நிலத்தில் அறுவடைச் செய்த தானியங்களைப் பக்குவப் படுத்தி வைத்துக் கொண்டு அவற்றினை விற்பனைச் செய்வதற்குத் தயாரான விவசாயி!
விவசாய நிலத்தின் விளைபொருட்களுக்குரிய குறைந்தபட்ச அடிப்படை விலை விவசாயச் சந்தையில் கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு ஒளி மயமான எதிர்காலத்தினை அடைய முடியும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த விவசாயி!
