வாழ்வின் உயர்வு
வாழ்வின் உயர்வு
பெண்ணாய் பிறந்தவள்
அழகாய் ரசித்த
சிறு பிள்ளைப்பருவத்தில்
வாழ்ந்த காலமெல்லாம்
இன்று அவளுக்கு
வசந்தமான நினைவுகளாய்
மட்டுமே தெரிகிறது..
கீழே விழுந்துவிட்டால்
வந்து அழுது நிற்பாள் தாயிடம்.
அவள் தாயோ ஓடி வந்து கட்டி அனணத்துக்கொள்வாள்
"எங்கே விழுந்த தங்கோ பார்த்து போயிருக்கலாம்ல
ஒன்னுமில்ல
நாளைக்கு சரி ஆகிடும்"
என்று ஆறுதல் சொல்வாள்
காயம் ஆரும்வரை..
அப்பொழுது தெரியவில்லை
இதைவிட பெரிய
வலிகளை தாங்கி
நாளை முன்னேறி
செல்ல வேண்டுமென்று
வலிமையோடு
தைரியம் கொண்டு
போராடும் மனமும்
தாங்கும் வலிகள்
நாளை மறையுமென்றும்
இல்லையேல் பழகிவிடுமென்று
இன்றுதான் புரிந்துகொண்டேன்.
சிறு உதாரணம்தான்
ஆனால் அதுதான்
இயல்பான வாழ்க்கை
நாளை பழகிவிடும்
என்று முன்னேறித்தான்
செல்லவேண்டும்.
இன்று கடினமாய் தோன்றும்
முதல் அடி
நாளை அடுத்த
கட்டத்திற்கு முன்னேறி நிற்கும்
வாழ்க்கை ஒரு போராட்டம்தான்
தினம் தினம்
புது உணர்வுகள்
புது புரிதல்கள்
புது வழிகள்
புதுமையான தெளிவு
புதுமையாக கற்றுணருதல்
அதுவே நாளைடைவில் பழகிவிட்டு புதியதிருப்பமாய்
அடுத்த கட்டத்திற்கு
கடந்து செல்வோம்.
அங்குதான்
வாழ்க்கையின் உயர்வு பிறக்கிறது.
ஒரு மனிதரை
பார்த்தவுடன்
நிறம் உடை உயரம்
பாவனையில்
இடைப்போட்டு விடுவோம்
ஆனால் பேசிய
பிறகுதான் புரியும்
அவன் சாமானிய
மனிதன் அல்ல என்று..
புரிந்து செயல்படுவோம்...
எதோ ஒரு வகையில்
நாம் எதையோ
கற்றுதான் வாழ்க்கையில்
முன்னேறி செல்கிறோம்.
அதில் தெளிவான
குறிக்கோளும்
வைராக்கியமும்
இருந்தால் போதும்
சாதித்துவிடலாம்..