டிடெக்ட்டிவ் ராக்கி
டிடெக்ட்டிவ் ராக்கி
ராம் ஒரு BPO ல வேல செய்யுறான், திடிர்னு தற்கொலை பண்ணிக்க முயற்சி பன்றான். தற்கொலை பண்றது முன்னாடி அவன் ஆபீஸ் எதிரி ரவிக்கு ஒரு வீடியோ ஒன்னு அனுப்புறான். இப்போ தற்கொலை பண்ண முயற்சி பன்றான், ஆன அவனுக்கு பயமா இருக்கு. தற்கொலை பண்ணனும்னு என்னத்த கை விடுறான்.
அவனோட ஆபீஸ் friend சந்துருக்கு கால். பண்ணி வர வைக்கிறான்.
சந்துரு to ராம் : என்ன டா, வர சொன்ன.
ராம் : நான் தற்கொலை பண்ணிக்க பாத்தேன் டா.
சந்துரு : ஏன் டா அப்படி பண்ண.
ராம் : நம்ம ஆபீஸ்ல இருக்கானே ரவி தான் அதுக்கு காரணம். நான் ஆபீஸ் வேலைய சிம்பிளா பண்ண ஒரு விஷயம் கண்டுபிடிச்சி இருந்தேன், அத எனக்கு தெரியாம ரவி எடுத்து அவன் தான் பண்ணேன்னு சொல்லி. ப்ரோமோஷன் வாங்கிட்டான்.
சந்துரு : அடப்பாவி அப்படியா பண்ணான், சரி அதுக்கு தற்கொலை பண்ணிக்கலாமா டா.
ராம் : டேய் அந்த process improvement மூலமா வர ப்ரோமோஷன ரொம்பவே எதிர் பாத்துட்டு இருந்தேன், எனக்கு கடன் நிறைய இருக்கு அந்த ப்ரோமோஷன் பெரிய ஹெல்பா இருந்து இருக்கும்.ரவி கிட்ட காசு இல்லனாலும், பரவா இல்ல, அவனே பெரிய பணக்காரன் ஏன் இப்படி பண்ணான்.
சந்துரு : சரி விடு. அது வரைக்கும் நீ தற்கொலை பண்ணிக்கலையே
ராம் : டேய் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் டா. தற்கொலை பண்றதுக்கு முன்னாடி, ஒரு வீடியோ ரவிக்கு அனுப்புனேன், அதுல உன் குழந்தை எப்படி நல்லா இருக்கும்னு பாக்கலாம்னு ஒரு சாபம் விட்டு பேசிட்டேன்.
சந்துரு : அந்த வீடியோ டெலீட் பண்ண முடியாதா.
ராம் : ஒரு மணி நேரம் மேல ஆகிடிச்சு டெலீட் பண்ண முடியாது.
சந்துரு : டேய் இரு,ரவி தான் கால் பன்றான்.
ரவி போன சந்துரு பேசிட்டு, கட் பன்றான்.
ராம் : என்ன டா சொன்னான் ரவி.ஏன் ஒரு மாதிரியா இருக்க.
சந்துரு : ரவியோட குழந்தைய காணோமா.
ராம் : ஐயோ டேய் நான் தான் அந்த குழந்தைய கடத்துனேன் ஆகிடும் இப்ப அந்த வீடியோ பாத்தா.
சந்துரு : அவன் இன்னும் அந்த வீடியோ பாக்கலனு நினைக்கிறன், பாத்து இருந்தா சொல்லி இருப்பானே.அவன் தான் எப்பவும் வாட்சப் செக் பண்ண மாட்டேனே.
ராம் : அப்படி அந்த வீடியோ பாத்தா, போலீஸ் நான் தான் அந்த குழந்தைய எதோ பண்ணிட்டேன்னு பாக்கும்.
சந்துரு : இதுல இருந்து நீ தப்பிக்கணும்னா, அந்த குழந்தைக்கு என்ன ஆச்சுனு கண்டுபிடிக்கணும்.
ராம் : நான் எப்படி டா கண்டுபிடிப்பேன்.
சந்துரு : அதுக்கு ஒரு ஆளு இருக்காரு.
ராம் : யாரு.
சந்துரு : பிரைவேட் டிடெக்டிவ் ராக்கி. அவரு எந்த கேஸயும் சீக்கிரம் கண்டுபிடிச்சி பிடிச்சிடுவாரு.
ராம் : அப்போ அவரு உதவிய கேட்போம்.
ராக்கிகிட்ட எல்லாம் பிரச்சனையும் சொல்ராங்க.
ராக்கி to ராம் : அந்த குழந்தைக்கு என்ன ஆச்சுனு சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவேன். அது வரைக்கும் நீங்க நான் சொல்ற இடத்துல தங்கிக்கோங்க, உங்கள கண்டிப்பா போலீஸ் தேடும்.
ரவி குழந்தைய காணோம்னு அப்செட்டா இருக்கான். அப்போ கடத்தல் காரங்க கிட்ட இருந்து போன் வருது, இந்த மாதிரி காச கொடுத்துட்டு குழந்தையை வாங்கிக்கோங்கனு. ஒரு இடத்த சொல்லி, அங்க காச வச்சிட்டா, குழந்தை உங்க வீட்டுக்கு வந்துடும்னு சொல்ராங்க. ரவி அவனோட இன்ஸ்பெக்டர் friendக்கு போன் பண்ணி பேசுறான்.
ரவி to இன்ஸ்பெக்டர் : டேய் என் குழந்தைய யாரோ கடத்திட்டாங்க, காசு கேட்டு மிரட்டுறாங்க.
இன்ஸ்பெக்டர் : நீ ஒன்னும் பயபடாத டா, நீ காச எடுத்துட்டு அந்த இடத்துக்கு போ, நான் பின்னாடியே follow பண்ணி வரேன், எவன் காசு எடுக்குறானோ அவன பிடிச்சிடுறேன்.
ரவி : சரி டா. குழந்தைக்கு ஏதும் ஆபத்து, வந்துடாதே.
இன்ஸ்பெக்டர் : நான் பாத்துக்குறேன், தைரியமா வா.
ரவியை follow பண்ணி இன்ஸ்பெக்டர் போறாரு, இவங்க ரெண்டு பேரையும் follow பண்ணி டிடெக்ட்டிவ் ராக்கி போறாரு.
ரவி காச வச்சிட்டு திரும்பி வராரு, இன்ஸ்பெக்டரும், ராக்கியும் யாரு காச எடுக்குறானு பாக்குறாங்க, ஒருத்தன் வந்து காசு எடுக்குறான், அவன இன்ஸ்பெக்டர் பிடிச்சு, அடிச்சு ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போயிடுறாரு.
ராக்கிக்கு அந்த போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு போலீஸ் தெரியும் அவர் பேரு வருண்.
ராக்கி to வருண் : என்ன வருண் இன்னைக்கு ஒருத்தன உங்க இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனக்கு கூபிட்டு வந்து இருப்பார்.
வருண் : அந்த ரவி குழந்தை மிஸ்ஸிங் கேஸ் ah.
ராக்கி : ஆமா பா கடத்தல் காரங்கள பிடிச்சாச்சா.
வருண் : இன்ஸ்பெக்டர் பிடிச்சது kidnapper இல்லை பா.
ராக்கி : வேற யாரு.
வருண் : அவன் ரவி மனைவியோட சொந்தகார பைய, ரவி அங்க காசு வைக்க போறான்னு, ரவி மனைவி மூலமா தெரிஞ்சிட்டு, அந்த kidnapperக்கு முன்னாடி அந்த காச எடுக்க முயற்சி பண்ணி மாட்டி, அடிவாங்கிட்டு இருக்கான்.
ராக்கி : அந்த கேஸ் details கொஞ்சம் சொல்லேன்.
வருண் : அந்த குழந்தை வெளிய விளையாடும் போது கடத்தி இருக்காங்க, அந்த குழந்தைக்கு 5 வயசு,பேச முடியாத குழந்தை.
ராக்கி : தேங்க்ஸ் பா. வேற தகவல் எதாவது இருக்க.
வருண் : நானும் இன்னொரு போலீஸும் தான், அந்த kidnapper எங்க இருக்காங்கனு track பண்ண போறோம்.ரவி வீட்ல நாங்க தான் இருக்க போறோம்.
ராக்கி : சூப்பர் அப்போ எனக்கு தேவையான information எல்லாம் நீயே கொடுப்ப.
வருண் : கண்டிப்பா நண்பா.
அன்னைக்கு நைட் kidnapper கால் பன்றான்.போலீஸ் வருண்,கால் trace பண்ண பாக்குறாங்க
ரவி to kidnapper : சொல்லுங்க.
kidnapper : போலீஸ் கிட்ட போகாதீங்கனு சொல்லியும் போறீங்க, உங்களுக்கு உங்க குழந்தை மேல அக்கறை இல்லையா.
ரவி : சாரி சார், இனிமே இப்படி நடக்காது.
kidnapper : நாளைக்கு எங்க காசு கொடுக்கணும் சொல்றேன், போலீஸ் கூட வந்தா குழந்தை காலி, இப்போ போலீஸ் என்னை trace பண்ண ட்ரை பண்ணுதுனு எனக்கு தெரியும், அது அவங்களால முடியாதுனு சொல்லு.
ரவி : என் குழந்தை, சாப்புடுற வீடியோ மட்டும் அனுப்புங்களேன் ப்ளீஸ், அவன் அவங்க அம்மாவும், வேலைக்காரி சகுந்தலாவும் ஊட்டி விட்டா தான் சாப்பிடுவான்.
kidnapper : நாளைக்கு வீடியோ சென்ட் பண்றேன்.
திடிர்னு பாத்திரம் விழுற சத்தம் கேட்டு, ரவி, ரவி மனைவி kitchen குள்ள போய் பாக்குறாங்க, வேலைக்காரி சகுந்தலா மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க. தண்ணி தெளிச்சு எழுப்புறாங்க
ரவி to வேலைக்காரி சகுந்தலா : என்னமா ஆச்சு.
சகுந்தலா : இல்ல சார், காலைல இருந்து சாப்பிடுல.
ரவி : ஏன் மா.
சகுந்தலா : குழந்தைய காலைல இருந்து காணோமே , டெய்லி நான் தான சாப்பாடு ஊட்டுவேன். குழந்தை சாப்பிட்டுச்சா தெரியாம ,எனக்கு எப்படி சாப்பாடு இறங்கும்.
ரவி : குழந்தைய காபித்திடலாம் மா, நீங்க போய் சாப்பிடுங்க.
ரவி அப்போ தான் இன்டர்நெட் ஆன் பன்றான், ராமோட வீடியோ கண்ணுல பட்ட உடனே ஷாக். ரவி, போலீஸ் வருண் கிட்ட விஷயத்தை சொல்றான்.
ரவி to போலீஸ் வருண் : சார் ராம் வீடியோ பாத்திங்களா, உன் குழந்தை எப்படி நல்ல இருக்கும் பாக்கலாம்னு சொல்லி இருக்கான். அவன் தான் குழந்தைய கடத்தி இருப்பான்.
வருண் : சரி அவன செக் பண்றோம் இப்பவே. உங்களுக்கு வேற யாராவது மேல சந்தேகம் இருக்கா.
ரவி : இருக்கு, என் மாமியார் மாமனார் மேல சந்தேகம் இருக்கு, நாங்க ஜாதி விட்டு ஜாதி கலயாணம் பண்ணோம்னு என்னையும், என் பொண்டாட்டியும் கொல்ல பாத்தாங்க.
வருண் : நாளைக்கு அவங்கள செக் பண்றோம்.
அடுத்த நாள்.
kidnapper, குழந்தை சாப்புடுற வீடியோவ அனுப்பி இருக்காங்க. அத பாத்து ரவி சந்தோஷ படுறாரு. ரவி மனைவியும், சகுந்தலாவும் குழந்தை நல்லபடியா வந்துடனும் சாமிக்கு பூஜா பன்றாங்க
போலீஸ் வருண், ராக்கிக்கு கால் பன்றான்.
ராக்கி : என்ன பா நடக்காது அங்க.
வருண் : ரவி ஆபீஸ்ல ராம் ஒருத்தன், ரவிக்கு வீடியோ அனுப்பி இருக்கான்.
ராக்கி : அவன் குற்றவாளி இல்லை யா.
வருண் : எப்படி சொல்ற.
ராக்கி : என்னை நம்பு.
வருண் : அப்பறம் ரவி அவன் மாமனார், மாமியார் மேல சந்தேக படுறான்.போலீஸ் அவங்க வீட்டுக்கு இன்னைக்கு செக்கிங் போகுது
ராக்கி : நானும் அவங்க வீட்டுக்கு போய் செக் பண்றேன்.
வருண் : அப்பறம், kidnapper குழந்தை சாப்புடுற வீடியோ அனுப்பி இருக்காங்க.
ராக்கி : அப்பிடியா, நான் அந்த விடியோவ பாக்கணுமே.
வருண் : அது நடக்காது பா. ரவி போன்ல வீடியோ இருக்கு
ராக்கி : எதாவது பண்ணேன் ப்ளீஸ்.
வருண் : சரி நான் இன்னைக்கு மதியானும் குள்ள உன்ன வீட்டுக்குல கொண்டு வரேன்.
ராக்கி : ஓகே.
ராக்கி போய், ரவி மாமனார், மாமியார நோட்டம் விட்டு, அவங்க குழந்தையை கடத்தலனு முடிவு ஆகுது.
போலீஸ் வருண் to ரவி : சார் என்ன போலீஸ்காரனே இப்படி சொல்றனே, நினைக்காதீங்க, எனக்கு தெரிஞ்ச ஒரு detective சீக்கிரமா எல்லாம் கேஸும் முடிப்பான், அவன் ஹெல்ப்க்கு வச்சிக்கலாமா, அவன் பேர் ராக்கி.
ரவி : எத தின்னா பித்தம் தீரும்னு இருக்கேன், ப்ளீஸ் அவர உடனே வர சொல்லுங்க.
வருண் : இந்த மேட்டர், இன்ஸ்பெக்டர்க்கு தெரிய கூடாது.
ரவி : சரி.
ராக்கி, ரவி வீட்டுக்கு வரான்.
kidnapper அனுப்புன வீடியோவ பாக்குறான். குழந்தைக்கு ஊட்டிவிடுற கை மட்டும் தெரியுது.
ரவி, ரவி மனைவி சாப்டுட்டு இருக்காங்க.
ராக்கி தண்ணி கேட்குறான், kitchen போய் எடுத்துக்க சொல்லி ரவி மனைவி சொல்ரா , kitchen போனா வேலைக்காரங்க சாப்டுட்டு இருக்காங்க, ஒரு நாயும் kitchenல இருக்கு, வேலைக்காரங்க சாப்பிட்டு இருக்கும் போது, ஒரு வாய் அந்த நாயிக்கும் ஊட்டுறாங்க.
ராக்கி to சகுந்தலா : இப்படி நாய்க்கு ஊட்டிட்டு, சாப்புடாதீங்க, அதோட எச்ச சாப்பிடுலாமா.
சகுந்தலா : இது அன்புல பண்றது சார்.
ராக்கி : ஓகே.
எல்லாரும் சாப்பிட்டு முடிக்குறாங்க. ராக்கி kidnapper கிட்ட இருந்து கால் வருமானு வெயிட் பண்ணிட்டு இருக்கான்
ராக்கி : எனக்கு தல வலிக்குற மாதிரி இருக்க, எதாவது டேப்லெட் கிடைக்குமா.
ரவி மனைவி : சாரி சார் வீட்ல டேப்லெட் இல்ல, நான் மெடிக்கல் போய் சகுந்தலாவ வாங்கிட்டு வர சொல்றேன்.
ராக்கி : அவங்களுக்கு எதுக்கு சிரமம்.
ரவி மனைவி : ஒரு சிறமும் இல்ல, அவ எப்படியும் அவ வீட்டுக்கு போய், அவ அம்மாக்கு மாத்திரை கொடுக்க போவா.
ராக்கி : ஓகே ஓகே.
ராக்கி போன நோண்டிகிட்டே வெயிட் பன்றான்.
கொஞ்சம் நேரம் கழிச்சு ஒரு போன் வருது, போன் பேசிட்டு.
ராக்கி to ரவி : நான் கிளம்புறேன்.
ரவி : குழந்தைய கண்டுபிடிச்சிடுவீங்கள.
ராக்கி : சீக்கிரமே.
ரவி : தேங்க்ஸ் சார்.
போலீஸ் ராம தேடிட்டு இருக்கு.
ரவியோட மாமியார் மாமனார், குழந்தைய காணும்னு சொல்லி ரவி வீட்டுக்கு வந்துடுரங்க. ஜாதி வெறில நிறைய தப்பு பண்ணிட்டோம்னு மன்னிப்பு கேட்குறாங்க.
ராக்கி, ரவியோட குழந்தைய கண்டுபிடிச்சி, கூட்டிட்டு வந்துடுறான்.
ரவியும், அவன் மனைவியும் சந்தோஷத்துல குத்திக்கிறாங்க.
ரவி to ராக்கி : ரொம்ப தேங்க்ஸ் சார். யாரு கடத்தனது.
ராக்கி : இந்த வீட்டுல இருக்க ஒருத்தங்க தான்.
ரவி ஷாக் ஆகுறான்.
சகுந்தலா குழந்தை கழுத்துல கத்திய வச்சு, ராக்கிய பாத்து எப்படி கண்டுபுடிச்சனு கேட்குறாங்க.
ராக்கி : kidnapper சென்ட் பண்ண வீடியோல
ஒருத்தர் சாப்பாடு ஊட்டிவிட்ட கை தெரிஞ்சு இருந்துது, அந்த கை ஊட்டி விடும் போது சுண்டு விரல் மடங்கி இருந்துச்சு, அது மாதிரி நீ kitchenல நாய்க்கு ஊட்டிவிடும் போது உன் கை சுண்டு விரல் மடங்கி இருந்துச்சு. அது மட்டும் இல்லாம நீ உன் வீட்டுக்கு போய் உங்க அம்மாக்கு மாத்திரை எடுத்து கொடுத்து உடனே, அடுத்து தெருவுக்கு போய் ஒரு வீட்டுக்கு போய்ட்டு வந்து இருக்க அத என் அசிஸ்டன்ட் விட்டுஉன் வாட்ச் பண்ண சொன்னேன். அந்த வீட்ல தான் உன் தம்பி குழந்தைய வச்சிட்டு இருந்தான்.நான் ரவி வீட்ல இருக்கும்போது என் அசிஸ்டன்ட் வீட்டுக்கு வெளிய இருந்தான், அவனுக்கு மெசேஜ் அனுப்பி உன் வாட்ச் பண்ண சொன்னேன். இப்படி தான் குழந்தை எங்க இருக்குனு கண்டுபிடிச்சோம், இப்ப உன் தம்பி,போலீஸ் ஸ்டேஷன்ல, கொஞ்சம் நேரத்துல நீயும் அங்க இருக்க போற.
குழந்தை கழுத்தில கத்திய வச்சு இருந்த, சகுந்தலா கிட்ட இருந்து குழந்தைய காப்பாத்திட்டான் ராக்கி.
அடுத்த நாள்.
ராம் to ரவி : நான் வீடியோ மட்டும் தான் சென்ட் பண்ணேன், உன் குழந்தைய கடத்துல.
ரவி : தெரியும், நான் தான் நீ பண்ண வேலைய நான் பண்ணேன் காட்டி ப்ரோமோஷன் வாங்கி மேனேஜர் ஆகிட்டேன் , இப்ப நான் வேலைய விட்டுட்டு போனாலும் உனக்கு மேனேஜர் ரோல் தரமாட்டாங்க, என் கிட்ட நிறைய பணம் இருக்கு, இந்த பதவி எனக்கு ரொம்ப முக்கியம். நான் பண்ண தப்புக்கு பரிகாரமா, உன்னோட மொத்த கடனையும் நான் செட்டில் பண்றேன்.
ராம் : ரொம்ப தேங்க்ஸ் பா.
---------------------The End ----------------
