திகில் கதை
திகில் கதை
ஒரு ஊரில் ஓர் தலையில்லா முண்டம் ஒன்று இருந்தது.நடு இரவில் அந்த கொடூர பேய் அங்கிருந்த மக்களின் வீட்டில் கதவை தட்டும்.அங்கு இருந்த மக்கள் அதற்குப் பயந்து கதவை திறக்க மாட்டார்கள்.ஒருவேளை கதவை திறந்து விட்டால் அவர்கள் இறந்து விடுவார்கள்.
அந்த பேய்க்கு ஈவு,இறக்கம் கிடையாது.ஒரு நாள் அங்கு இருந்த மக்கள் ஒரு முடிவுக்கு வந்நனர்.அது என்னவென்றால் பக்கத்து ஊரில் ஒரு சாமியார் இருக்கிறார்.அவரை அழைத்து வந்து அந்த தலையில்லா முண்டத்தை அழிக்க முயன்றலாம் என்று யோசித்தனர்.
அதேபோல் அந்த சாமியாரை அழைத்து வந்தனர்.அவரும் அந்த பேயை அழிக்க பல வேலைகள் செய்தார்.ஒரு கட்டத்தில் அந்த பேயை அழிக்க முடியாமல் போனது.அங்கிருந்த மக்கள் படபடத்தனர்.அப்போது அந்த சாமியார் "அந்த பேயை அழிக்க ஒரு வழிதான் இருக்கிறது அது என்னவென்றால் இந்த ஊரில் உள்ள மக்களிள் யாராவது பத்து பேரின் தலையை வெட்டி அங்குள்ள மரங்களில் தொங்க விட வேண்டும்.அப்படி செய்தால் அந்த பேய் அந்த தலைகளை திண்றுவிட்டு போய்விடும் " என்றார்.
இதை கேட்ட மக்கள் பயந்தனர்.இதை செய்தால் தான் அந்தப் பேய் இங்கிருந்து போகும் வேறு வழி இல்லை என்றார் சாமியார்.அந்த மக்கள் சாமியார் சொன்னபடியே பத்து பேரின் தலையை வெட்டி அங்குள்ள மரங்களில் தொங்க விட்டனர்.
அந்த பேயும் இரவு நேரத்தில் வந்து அந்த தலைகளை எல்லாம் திண்றுவிட்டு சென்றது.அந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியாகத் தூங்க சென்றனர். திடீர் நல்லிரவில் அந்த ஊரில் ஒருவரின் வீட்டு கதவு தட்டப்பட்டது.அவரும் யாராக இருக்கும் என்று கதவை திறந்தார்.கதவை திறந்தவுடன் பேய் அவரை அடித்து அவர் "டூம்" என்று கீழே விழுந்தார்.விடிந்தவுடன் அவர் இறந்து கிடந்ததை கண்ட மக்கள் "அந்தப் பேய் இன்னும் அழியவில்லை,அதை அழிக்கவும் முடியாது" என்று புரிந்துக் கொண்டனர்.