Arul Prakash

Thriller

4  

Arul Prakash

Thriller

பணம், பேய், காதல்

பணம், பேய், காதல்

9 mins
364


ரவி, அசோக், ராம் மூணு பேரோட அப்பாவும் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ். இவங்க மூணு பேரும் சின்ன வயசுல இருந்து friends. மூணு பேருக்கும் 24 வயசு தான் ஆகுது. பெரிய பணக்கார வீட்டு பசங்க.

ரவி, அசோக், ராம் மூணு பேரும் ஆபீஸ் ஒண்ணா தான் கிளம்புவாங்க. ரவி வீட்டுக்கு, அசோக்கும், ராமும் காலையிலே வந்துடுறாங்க.

ரவி to ரவி அம்மா : ஏன் இன்னைக்கு அப்பா ஆபீஸ்க்கு வரல.

ரவி அம்மா : நீங்க தான் ஆபீஸ நல்லா பாத்துக்கிறீங்களே, அதுனால அப்பா அடிக்கடி ஆபீஸ் லீவு போடுவாரு. இனி நீங்க மூணு பேரு தாண்டா ஆபீஸ பாத்துக்க போறீங்க.

அசோக் : அம்மா நாங்க கொஞ்சம் நாள் காலேஜ் முடிச்சிட்டு, freeya இருக்கலாம்னு பாத்தோம், எங்கள புடிச்சி ரெண்டு வருஷமா ஆபீஸ் நிர்வாகத்தை கொடுத்துட்டீங்க.

ரவி அம்மா : ஏன் பா நீங்க மூணு பேரும் ஆபீஸ நல்லா பாத்துக்கிறீங்கனு உங்க மூணு அப்பாக்களும் சொல்ராங்க.

ராம் : ஆபீஸ் வேல புடிக்கலைன்னாலும் நம்ம ஆபீஸ் ல நல்லா பாத்து ஆகணும்.

ரவி அம்மா : அது எப்படி டா வேல புடிக்கலானாலும், அத சிறப்பா செய்றது.

ரவி : அம்மா நீ எப்படி அப்பாவை புடிக்காம, சிறப்பா குடும்பம் நடத்துறியோ, அப்படி தான்

ரவி அம்மா : உத இவனை,உங்க அப்பா முன்னாடி சொல்லிடாத டா, நீ விளையாட்டுக்கு சொன்னது கூட மூஞ்ச தூக்கி வச்சி பாரு.

ரவி : சரி.சரி. நாங்க மூணு பேரும் இந்த வாரம் வியாழ கிழமை,கோவா போறோம்.

ரவி அம்மா : ஞாபகம் இருக்கு டா, நல்லபடியா போய்ட்டு வாங்க. கோவால, நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தான தங்க போறீங்க.

ரவி : இல்ல மா,அப்பா பெரிய ஹோட்டல்ல தங்கி என்ஜோய் பண்ண சொல்றாரு.

ரவி அம்மா : சரி டா, ஆபீஸ் டைம் ஆனா போல தெரியுது.

ரவி : சரி மா நாங்க கிளம்புறோம்.

மூணு பேரும் ஆபீஸ் போய்ட்டாங்க.

ரவியோட ஆபீஸ் ரூம்ல, அசோக்கும், ராமும் உட்கார்ந்து இருகாங்க.

ரவி to அசோக் : டேய் நீ ஏன் டா உங்க அப்பா கிட்ட பேச மாற்ற.

அசோக் : சொல்லியே ஆகணுமா.

ரவி : ஆமா சொல்லு.

அசோக் : அந்த ஆளு எப்போவுமே stress create பண்றதே ஒரு வேலயா வச்சு இருக்கான் டா.இப்ப எங்க அம்மா kitchen ல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வராங்க வச்சிக்கோ, ஏன் நடந்து வர,ஓடி வான்னு ஒரு பிரஷர போடுவாரு, யாருனா comfortable ah இருந்தா பிடிக்காது, நான் வேகமா சாப்பிட்டா, மெதுவா சாப்பிட சொல்வாரு, மெதுவா சாப்டா, சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு டானு சொல்லுவாரு. ஒருத்தர stress ஆக்குறதுக்கு அவருக்கு ரொம்ப புடிக்கும்,சத்தம் போட்டு படிச்சா, மனசுக்குள்ள படி டா சொல்லுவாரு, மனசுக்குள்ள படிச்சா, சத்தமா படிக்க சொல்வாரு. இதுனாலயே எங்க அம்மாக்கு எல்லா நோயும் இருக்கு. ஒரு நாள் சண்டை போட்டேன் அந்த ஆள் கிட்ட, இப்போவர பேசறது இல்ல, இப்போ தான் நிம்மதியா இருக்கேன்.

ராம் : டேய் அசோக் சொல்றது கரெக்ட் தான், உங்க அப்பா பத்தி எங்க அப்பா நிறைய சொல்லி இருக்காரு, அவரு கீழ ஒரு 50 பேரு கொண்ட டீம, கோவா branch ல கொடுத்தாங்கலாம் ஒரு வருஷம் முன்னாடி, பயங்கரமா வேல வாங்கி அரை மணி நேரம் வேலைய 5 நிமிஷத்துல் பண்ண சொல்லி stress ஏத்தி இருக்காரு , அந்த டீமே சேர்ந்து கம்பளைண்ட் பண்ணிடிச்சாம். உங்க அப்பாக்கு சைக்கோனு ஒரு பேரு ஆபீஸ்ல இருக்கு.

அசோக் : கரெக்ட் ah தான் டா வச்சி இருக்காங்க பேரு சைக்கோனு.

ரவி : சரி டா. நம்ம கோவா பிளான் பத்தி பேசுவோமா

லட்சுமினு ஒருத்தங்க, வயசு 55,ஆபீஸ்ல ரொம்ப வருஷமா வேல செய்யுறாங்க, நல்ல பொசிஷன்ல இருக்காங்க. அவங்க ரவி ரூம்க்கு வராங்க.

லட்சுமி : உள்ள வரலாமா.

ரவி : வாங்க மேடம்.

லட்சுமி : ஒரு சைன் வாங்க வந்தேன்.

ரவி : காட்டுங்க மேடம்.

லட்சுமி : எப்போவுமே மூணு பேரும் ஒண்ணா தான் இருக்கீங்க.

ரவி : இப்போ அவங்க ரெண்டு பேரும் அவங்க ரூம்க்கு போய்டுவாங்க.

லட்சுமி : சரி பா, சும்மா தான் கேட்டேன், ஆமா உங்க மூணு பேருக்கும் எப்போ கல்யாணம்.

ரவி : இப்போ என்ன மேடம் அவசரம், உங்க

பொண்ணுங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க.

அசோக் : ஆமா மேடம்,உங்க மூணு பொண்ணுங்களும் நம்ம ஆபீஸ்ல தான் வேல செய்யுறாங்க, உங்க husband க்கும் இங்க ஒரு வேல பாத்துட்டா, உங்க குடும்பமே இங்க வேல செய்யுற மாதிரி இருக்கும்ல.

லட்சுமி : அவர் தான் வரமாட்டேன் சொல்லிட்டாரு.

ரவி : ஓ.

லட்சுமி : சரி பா நான் போய் வேலைய பாக்குறேன்.

லட்சுமிக்கு மூணு பொண்ணுங்க, ரேகா, தேவி, ரம்யா.

லட்சுமி அவங்க மூணு பொண்ணுங்க கிட்ட பேசறாங்க : தெரியுமா உங்களுக்கு, ரவி, அசோக், ராமும் கோவா போறாங்களாம்.

ரேகா : அவங்க போனா போகட்டும் இத ஏன் இங்க சொல்றிங்க.

லட்சுமி : நீங்க மூணு பேரும் கோவாக்கு போறீங்க, அதே ஹோட்டல்ல உங்களுக்கும் ரூம் புக் பண்ணி இருக்கேன்.

தேவி : நீ தாயா இல்ல பேய்யா. எங்களுக்கு அவங்கள பிடிக்குல. சாம்பார் பாய்ஸ்.

லட்சுமி : புடிக்குதோ இல்லையோ, அவங்கள கரெக்ட் பண்ணி லவ் பண்ணா உங்க மூணு பேரு லைப்பும் செட்டில் ஆகிடும்.

ரம்யா : அவனுங்க எங்கள மதிக்கவே மாட்றானுங்களே.

லட்சுமி : எல்லாமே ஈசியா அமைஞ்சிடுமா, கொஞ்சம் முயற்சி பண்ணனும். எனக்கு தெரியாது நீங்க மூணு பேரும் கோவா போறீங்க.

ரம்யா : போய் தொலைக்கிறோம்.

ரவி, அசோக், ராம் மூணு பேரும் கோவா போயிடுறாங்க. தங்குற ஹோட்டல்ல ஒரு pub இருக்கு அங்க குடிச்சிட்டு இருக்காங்க, அங்க ரேகா, தேவி, ரம்யாவ பாக்குறாங்க, கூப்பிட்டு பேசுறாங்க.

ரவி to ரேகா : ஹே என்ன பா நீங்களும் கோவா வந்து இருக்கீங்க, what a co incidence.

ரேகா : எஸ், எதர்ச்சியா தான் உங்கள பாத்தோம்.

அசோக் : நான் இத co incident னு நினைக்கல, பிளான் பண்ணி நம்மள follow பண்ணி இருக்காங்கனு தோணுது.

ரேகா : ச்ச ச்ச அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.

அசோக் : எந்த ஹோட்டல்ல நாங்க தாங்குறோம்னு , நம்ம ஆபீஸ் ல வேல செய்யுற ஸ்ரீ காந்த்க்கு மட்டும் தான் தெரியும், அவனுக்கு கால் பண்ணா உண்மை தெரிஞ்சிடும்.

கால் பண்ண போறான் அசோக்.

ரேகா : நாங்களே உண்மைய சொல்லிடுறோம்.

அசோக் :சொல்லுங்க.

ரேகா : நீங்க ஸ்ரீகாந்த் கிட்ட இந்த ஹோட்டல்னு சொன்னத எங்க அம்மா கேட்டுட்டாங்க..

அசோக் : உங்க அம்மாவா.

ரேகா : ஆமா நாங்க கோவா வந்ததுக்கே எங்க அம்மா தான் காரணம், உங்க மூணு பேர லவ் பண்ணி கல்யாணம் பண்ணா லைப் செட்டில் ஆகிடும்னு எங்க அம்மா ஆசை.

அசோக் : ஓ இது தான் விஷயமா.

ரேகா : ஆனா எங்களுக்கு உங்க மூணு பேரு மேல லவ்வே இல்ல.

ரவி : ஏன் நாங்க அழகா இல்லையா.

தேவி : அது இல்ல, நாங்க ஆபீஸ்ல வேற ஒரு மூணு பேர லவ் பண்றோம்.

ரவி : யாரு அது.

தேவி : விஷ்வா, சதிஷ், பழனி.

ரவி : நல்ல சாய்ஸ், நல்ல பசங்க.

தேவி : ஆமா நீங்க எங்கள ஒரு லுக் கூட விட்டது இல்ல ,நாங்க அழகா இல்லையா.

ரவி : அதுவா, நாங்க ஆபீஸ்ல எந்த பொன்ணையும் தப்பா பாக்கறது இல்லனு, உறுதி மொழி எடுத்துகிட்டோம்.

தேவி :ஓகே.

அன்னைக்கு நைட் 6 பேரும் நல்லா குடிச்சிட்டு அவங்க அவங்க ரூம்க்கு போயிடுறாங்க.

காலையில ரூம் பிடிக்கலைனு ரவி, அசோக், ராம் மூணு பேரும் அந்த ஊருல இருக்க ரவியோட கெஸ்ட் ஹவுஸ்க்கு போக ஹோட்டல் வெளிய வராங்க, அங்க ரேகா, தேவி, ரம்யா மூணு பேரும் ரூம் காலி பன்னிட்டு நிக்கிறாங்க. ரவி அவங்க கிட்ட பேசுறான்.

ரவி to ரேகா : ஏன் இங்க நிக்கிறீங்க.

ரேகா : நேத்து குடிச்சிட்டு ரூம்ல சவுண்டா பாட்டு போட்டு டான்ஸ் ஆடினோம், பக்கத்து ரூம்ல கம்பளைண்ட் பண்ணதால ஹோட்டல் விட்டு தொரத்திட்டாங்க.

ரவி : சரி விடுங்க, எங்களுக்கு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு, அங்க தங்கிக்கோங்க.

ரேகா தயங்குறா.

ரவி : என்னை தயக்கம்.

ரேகா : உங்க கூட நாங்க எப்படி தனியா.

ரவி : தனி தனி ரூம் இருக்கு, தைரியமா வாங்க.

எல்லாரும் கிளம்பி கெஸ்ட் ஹவுஸ் போய்ட்டாங்க.

கெஸ்ட் ஹவுஸ் வாசல்ல வாட்ச்மேன்.

ரவி to வாட்ச்மேன் : எப்படி இருக்கீங்க.

வாட்ச்மேன் : நல்ல இருக்கேன் சார்.

வாட்ச்மேன் : சார்.

ரவி : சொல்லுங்க, என்னை தயக்கம், எதுனா காசு வேணுமா.

வாட்ச்மேன் : இல்ல சார், இந்த பங்களா ல பேய் இருக்கு சார்.

ரவி : ஹா ஹா ஹா இந்த காலத்துல பேய்னு லாம் சொல்லிட்டு. நாங்க பாத்துக்குறோம் விடுங்க.

எல்லாரும் குடிச்சிட்டு அவங்க அவங்க ரூம்க்கு போயிடுறாங்க, ரவி, அசோக், ராம் ஒரு ரூம்ல, ரேகா, தேவி, ரம்யா ஒரு ரூம்ல தங்கி இருக்காங்க.

ரவி ரூம்ல, திடிர்னு ஒரு சத்தம், ரவி எந்துருச்சி பாக்குறான், அசோக் பொண்ணு வாய்ஸ்ல தனியா பேசிட்டு இருக்கான். அவன கூப்பிட்டா பேய்யாட்டம் ஓடி போய் கீழ் ஹால்ல நிக்குறான்.அப்பறம் normal ah பேசுறான்.அப்பறம் திடிர்னு ராம் பேய் பிடிச்ச மாதிரி பொண்ணு வாய்ஸ்ல பேசிட்டு வரான். ரவி பயந்து வாட்ச்மேன கூப்பிடுறான். சத்தம் கேட்டு மூணு பொண்ணுங்களும் கீழ வராங்க. வந்த வாட்ச்மேன், ஆண் வாய்ஸ்லையும், பெண் வாய்ஸ்லையும் மாத்தி மாத்தி பேசுறான். வாட்ச்மேன் மேல பேய் வந்துடுச்சு.6 பேரும் பயந்து நிக்கிறாங்க. ரவி, வாட்ச்மேன் மேல இருக்குற பேய் கிட்ட பேசுறான்.

ரவி to பேய் : யாரு நீ உனக்கு என்னை வேணும்.

பேய் : என் பேரு சகுந்தலா, என்னை உங்க மூணு பேரோட அப்பாங்க தான் கொன்னு இந்த கெஸ்ட் ஹவுஸ்ல புதைச்சாங்க.

ரவி : ஐயோ எதுக்கு உன்ன கொன்னங்க.

பேய் : எல்லாம் பெண் ஆசை தான்.

ரவி : அதுக்காக எங்கள கொன்னுடாத.

பேய் : உங்க அப்பாங்க மூணு பேரையும் கூட்டிட்டு வாங்க இங்க, அவங்கள தான் கொல்ல போறேன். வர அம்மாவாசை குள்ள கூப்பிட்டு வரணும் இன்னும் மூணு நாள்ல அம்மாவாசை. அப்படி இல்லனா உங்களை கொன்னுடுவேன்.

ரவி : சரி.

பேய் கிட்ட பேசிட்டு இருக்கும் போதே, ஒரு 5 பேரு கெஸ்ட் ஹவுஸ் குள்ள புகுந்து, மூணு பொண்ணுங்களையும் தூக்கிட்டு போறாங்க, ரவி, அசோக், ராம் மூணு பேரும் அவங்க கிட்ட சண்டை போடுறாங்க ஆனா அவங்களால சமாளிக்க முடியாம அடிவாங்குறாங்க. அந்த வாட்ச்மேன் மேல இருந்த பேய் வந்த 5 பேரையும் அடிச்சு ஓட விட்டுடிச்சி. பொண்ணுங்க என்னை நடக்குது இங்கனு புரியாம நிக்கிறாங்க. மூணு பொண்ணுங்களும் பேய்க்கு நன்றி சொல்ராங்க.

ரவி to பேய் : யாரு இவங்கள கடத்த முயற்சி பண்ணது.

பேய் : அத சொல்றது, என் வேல இல்ல.

சொல்லிட்டு பேய் வாட்ச்மேன் உடம்ப விட்டு போய்டிச்சி.

அடுத்த நாள்.

ரவி to அசோக் : டேய் என்னங்க டா, நம்ம அப்பனுங்க இவளோ பெரிய வில்லனா இருக்காங்க.

அசோக் : எங்க அப்பன் தான் இதுக்கு மூல காரணமா இருப்பான்.

ரவி : இப்ப என்ன பண்ணலாம்.

அசோக் : எங்க அப்பன மட்டும் வர சொல்லி, பேய் கிட்ட புடிச்சி தந்துடலாமா.

ரவி : யாரையும் வர சொல்ல தேவ இல்ல, ரெண்டு நாள்ல பேய்க்கு தெரியாம கிளம்புறோம் ஊருக்கு. பேய்ய பாத்தா நல்ல பேய் மாதிரி தான் தெரியுது, அந்த பொண்ணுங்கள வேற காப்பாத்தி இருக்கு. அதனால நம்மள ஏதும் அந்த பேய் பண்ணாது.

அசோக் : ஏதோ சொல்ற, அதையே பண்ணுவோம்.

தேவி ரவிய பாக்க வரா.

தேவி to ரவி : நாங்க மூணு பேரும் கிளம்புறோம்.

ரவி : ஏன்.

தேவி : நேத்து எங்கள எவனோ கடத்த பாத்தான், அந்த பேய் இல்லனா எங்க கதி.

ரவி : எவன் உங்களை கடத்த பாத்தோனோ, அவன இன்னைக்கே கண்டு புடிக்கிறோம்.எங்கள நம்பி இங்க இருங்க.

தேவி : ஒரு நாள் தங்குறோம், பிறகு பாக்கலாம்.

ரவி : ஓகே.

ரவி அந்த ஊர்ல இருந்த அவனோட இன்ஸ்பெக்டர் friend ரஞ்சித்த ah மீட் பன்றான்.

ரஞ்சித் : சொல்ற என்னை பிரச்சனை.

ரவி : இது மாதிரி எங்க friends ah கடத்த 5 பேரு வந்தாங்க.

ரஞ்சித் : அவங்க முகத்தை பாத்தியா.

ரவி : எல்லாரும் மாஸ்க் போட்டுட்டு இருந்தாங்க, ஒருத்தன் மாஸ்க்க கிழிச்சிட்டேன்,முகத்தை பாத்துட்டேன்.

ரஞ்சித் : எப்படி இருந்தான்.

ரவி : முகம் full ah டாட்டூ இருந்தது, மூக்குக்கு ஒரு வளையம் போட்டு இருந்தான், காத்துக்கும் வளையம் போட்டு இருந்தான். நான் இன்னும் கூட அடையாளம் சொல்றேன், உங்க டிபார்ட்மென்ட் ஆளு வச்சி வரஞ்சிக்கிறியா .

ரஞ்சித் : அதெல்லாம் தேவ இல்ல. நான் யாருனு கண்டு பிடிச்சிட்டேன்.

ரஞ்சித்,ஒரு போட்டோ எடுத்து ரவி கிட்ட காட்டுறான்

ரவி : இவன் தான் டா.

ரஞ்சித் : ஜானி கேங் தான், பேரு தாமஸ் , யாரு இவங்கள அனுப்புனான் விசாரிக்கிறேன்.

ரவி : ஓகே டா.

கொஞ்ச நேரம் கழிச்சு ரஞ்சித், ரவிக்கு கால் பன்றான். ரவி, ரஞ்சித்த பாக்க போறான்.

ரவி to ரஞ்சித் : என்ன டா கூப்பிட்டு இருந்த.

ரஞ்சித் : யார் அந்த பொண்ணுங்கள கடத்த சொன்னான்னு, கண்டுபுடிச்சிட்டேன்.

ரவி : யாரு.

ரஞ்சித் : நீயே அங்க போய் பாரு.

ரவி போய் பாக்குறான், அதிர்ச்சி ஆகுறான். அது யாருன்னா அந்த மூணு பொண்ணுங்களையும் லவ் பண்ற விஷ்வா, சதிஷ், பழனி.

ரவி to விஷ்வா : டேய் நீங்களா இப்படி பண்ணீங்க.

விஷ்வா : ஆமா எங்கள ஏமாத்திட்டு, உங்க கூட வந்து தங்கிட்டா, விட்டுடுவோமா, கொலை பண்ணிடுவோம்.நீங்க புக் பண்ண ஹோட்டல் அவளுகளும் புக் பண்ணி இருக்காங்க தெரிஞ்ச உடனே, நாங்களும் கோவா வந்தோம், நாங்க நினைச்சா மாதிரியே நடந்துடுச்சு.

ரவி : நீங்க நினைச்சது எதுவும் நடக்கல.

ரவி எல்லா கதையும் சொல்றான், அப்பறம் தான் விஷ்வா, சதிஷ், பழனிக்கு புரிஞ்சிது.

விஷ்வா : தயவு செஞ்சு நாங்கதான் கடத்துனோம்னு, ரேகா, தேவி, ரம்யாக்கு தெரிய வேண்டாம்.

ரவி : சரி ஏதும் சொல்லல. உங்களை தேடி ஹோட்டல் வரைக்கும் வந்துட்டாங்கனு மட்டும் சொல்றேன்.

விஷ்வா : ஓகே

கெஸ்ட் ஹவுஸ் போய்,விஷ்வா, சதிஷ், பழனிய காட்டுன உடனே, அந்த மூணு பொண்ணுங்களும் துள்ளி குதிக்குறாங்க.

தேவி : எங்கள பாக்காம இருக்க முடியாம எங்கள தேடி இவளோ தூரம் வந்துட்டீங்களா, இது தான் சிறந்த லவ்.

விஷ்வா : எஸ் எஸ்.

விஷ்வா, சதிஷ், பழனி மூணு பேரு, அந்த பொண்ணுங்க கூட நல்ல ஊரு சுத்திட்டு நைட் வராங்க. ரவி, அசோக் லாம் இருக்காங்க கெஸ்ட் ஹவுஸ்ல.

தேவி to ரவி : நாங்க மூணு பேரும் நாளைக்கு கல்யாணம் பண்ணலாம் முடிவு பண்ணி இருக்கோம்.

ரவி : ஹே சூப்பர், என்னை திடிர்னு.

தேவி : எங்க அம்மா எப்படியும் அனுமதிக்க மாட்டாங்க, இங்கேயே கல்யாணம் பண்ணிட்டு சொல்லிடலாம்னு தோணுது.

ரவி : great. நாளைக்கு காலைலயே பண்ணிடுவோம்.

அடுத்த நாள் காலையில கல்யாணம் பண்ண, கிளம்புறாங்க ரவி அசோக் லாம்.

வாட்ச்மேன் ரவி ரூம்ல இருந்து வராரு.

ரவி to வாட்ச்மேன் : நீ என்னயா என் ரூம் ல இருந்து வர.

வாட்ச்மேன் : கிளீனிங் work சார்.

ரவி : ஓகே ஓகே.

கல்யாணம் கோவா பக்கத்துல ஒரு ஊருல நல்லபடியா முடிஞ்சிது. அந்த காட்டுக்குள் இருக்க கோயில்ல சிக்னல் கிடைக்காததால, தேவி அவங்க அம்மாக்கு தள்ளி வந்து போன் பண்ரா.

தேவி to தேவி அம்மா : மா இந்த விஷ்வா, சதிஷ், பழனி எங்கள கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிட்டாங்க.

தேவி அம்மா : பொய் சொல்லாத, அவங்க நல்ல பசங்க.

தேவி : நாங்க ஓடி போய் கல்யாணம் பண்ணிட்டோம்.

தேவி அம்மா : அடி பாவிங்களா, உங்களை வச்சு எவளோ பிளான் லாம் போட்டு இருந்தேன்.

தேவி : எங்களுக்கு இவங்கள தான் புடிச்சிருக்கு, நீயே நல்ல பசங்கனு சொல்ற, அப்பறம் என்ன.

தேவி அம்மா : சரி வந்து சேருங்க.

தேவி to ரவி : சரி நாங்க அப்டியே, ஊற பாத்து கிளம்புறோம்

ரவி : பாத்து போங்க.

இவங்கள அனுப்பிட்டு கார்ல வராங்க.ரவி அசோக் ராம் லாம்.

ரவி to அசோக் : டேய் என் போன்ல இருந்து அப்பாக்கு ஒரு மெசேஜ் போய் இருக்கு டா.

அசோக் : என்னனு

ரவி : நீங்க கொலை பண்ணது எங்களுக்கு தெரிஞ்சி போச்சி, சீக்கிரம் கிளம்பி வாங்க, உங்க friends ஓட வாங்க.

அசோக் : watchmen ரூம் குள்ள வந்தான்ல, அவன் மூலமா அந்த பேய் அனுப்பி இருக்கும் அந்த மெசேஜ.

ரவி : கரெக்ட், சீக்கிரம் வீட்டுக்கு போகணும், அப்பாங்க வந்து இருப்பாங்க.

அசோக் : அவங்க ஏன் நமக்கு கால் பண்ணல.

ரவி : காலையில இருந்து அந்த காட்டுக்குள்ள எங்க சிக்னல் இருந்துது.

நைட் ஆகிடிச்சு , கெஸ்ட் ஹவுஸ் வந்துட்டாங்க மூணு பேரும். மூணு அப்பாக்களும் chair போட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்க, watchmen மேல பேய் வந்து இருக்கு, நின்னுட்டு இருக்கான்.

ரவி to பேய் : எங்க அப்பாவை ஏதும் பண்ணிடாத.

பேய்,கோபம் ஆகி திடிர்னு பாக்க, அசோக் மட்டும் அந்தரத்துல் தொங்கிட்டு இருக்கான்.

அசோக் அப்பா to பேய் : பேய் கால்ல விழுந்து என்னை என்ன வேணா பண்ணு அவன விட்டுடு.

பேய் : என்ன நடந்துதோ உங்க பையன் முன்னாடி சொல்லு.

அசோக் அப்பா : எனக்கு சாதாரணமாவே, ஒருத்தர அவங்க comfort zone ல இருக்க விடாம stress ஆக்குறது புடிக்கும். எனக்கு கோவா branch ல 50 பேரு என் கீழ வேல செஞ்சாங்க, எல்லாரையும் ரொம்பவே வேல வாங்குனேன் அரை மணி நேர வேலைய 15 நிமிஷத்துல பண்ண சொல்லுவேன். என் கீழ வேல செஞ்ச 50 பேரு ல ஒருத்தன் இந்த சகுந்தலா பையன், சுனில். நான் பண்ண டார்ச்சர்ல அவன் பைத்தியம் ஆகிட்டான், அத கேட்க ஒரு நாள் நம்ம கெஸ்ட் ஹவுஸ் எப்படியோ கண்டுபிடிச்சி வந்தாங்க. என் பையன் உன்னால தான் பைத்தியம் ஆனான்னு, சொல்லி திட்டுனாங்க, நான் போதையில பாட்டில் எடுத்து அவங்க தலையில அடிச்சேன், செத்துட்டாங்க. இங்கயே போதச்சுட்டோம்.

ரவி, அசோக், ராம் இந்த கதைய கேட்டு அதிர்ச்சி ஆகுறாங்க. அசோக்க அந்தரத்துல் அந்த பேய் இறக்கி விட்டுடுத்து

பேய் to அசோக் அப்பா : இப்போ என் பையன் யாரும் இல்லாத அனாதையா, பைத்தியக்கார ஹாஸ்பிடல் இருக்கான். நான் உன் புள்ளைய கொல்றேன், அப்போ தான் உனக்கு புத்தி வரும்.

அசோக் அப்பா பேய் கால்ல விழுந்து அழுகுறாரு.

திடிர்னு அசோக் மூணாவது மாடில இருந்து, கீழ குதிச்சுடுறான். எல்லாரும் பதிரி போய் கீழ பாக்குறாங்க. அசோக் செத்துட்டான்.

அவன அந்த பேய் கொல்லல,அவன் அவங்க அந்த அம்மாவோட கஷ்டத்தை அவங்க அப்பாக்கு புரிய வைக்க அவனே இப்படி பண்ணிக்கிட்டான்.

அந்த பேய் : நான் அவன கொல்லல ன்னு சொல்லிகிட்டே, வாட்ச்மேன் உடம்ப விட்டு போய்டுச்சு.

அசோக் அப்பா போலீஸ்ல சரண் அடைஞ்சிடுறாரு. அந்த சகுந்தலா அம்மா பையன ஹாஸ்பிடல் போய் ரவியும், ராமும் பாத்துக்குறாங்க.



Rate this content
Log in

Similar tamil story from Thriller