மனதின் அழகு
மனதின் அழகு
அடர்ந்த காட்டுக்குள் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தின் அருகே குளம் இருந்த நிலையில் அங்கு நிறைய விலங்குகள் வசித்துவந்தன.
அணைத்து விலங்குகளும் ஒன்றுடன் ஒன்று நட்பாக பழகி வந்தன. அப்போது ஒரு நாள் அங்கு மிக அழகான அன்னம் ஒன்று தண்ணீர் பருக வந்தது. அப்போது அங்கு ஒரு குயில் வந்தது தண்ணிரை பருக. அப்போது குயில் அன்னத்தின் அழகை பார்த்து வியந்து போனது. அனைத்தின் அருகே சென்று, "நீ எவ்வளவு அழகா உள்ளாய், உன்னை போல நானும் அழகா மாற என்ன செய்யவேண்டும்?", என கேட்டது குயில்.
அதற்கு அன்னம் கூறியது, "நீ ஏன் அப்படி ஆசை கொள்கிறாய், நீ, நீயாக இருப்பதே ஒரு தனி அழகுதானே. மற்றும் அழகு என்பது வெளிப்புற தோற்றத்தில் இல்லை அது மனதில் இருக்க வேண்டும்".
ஓ, அப்படி என்றல் நானும் அழகா உள்ளேனா? என்ற குயிலின் கேள்விக்கு." ஏன் , இது வரை யாரும் உன்னிடம் சொன்னதேஇல்லையா ?" என்றது அன்னம்.
குயிலுக்கு தானும் அழகாக இருக்கிறோம் ஏன் கேட்டவுடன் அளவில்லா மகிழ்ச்சி. இரண்டு பறவைகளும் தண்ணீர் பருகிவிட்டு தம் வசிப்பிடத்திற்கு திரும்பினார்.
மாரு நாள், ஒரு மிக பெரிய சத்தம் , என்ன என்று அறியாமல் அனைத்து விலங்குகளும் பயத்தில் சூழ்ந்தன.
அந்த குயிலுக்கு நாம் எவ்வளவு அழகு சரி நாம் சென்று பார்க்கலாம் என எண்ணி துணிந்து வந்தது. பார்த்தால் மனிதர்கள் அந்த பெரிய மரத்தை வெட்ட வந்திருப்பதை உணர்ந்த குயில் மற்ற விலங்குகளிடம் அதை சென்று கூறியது.
செய்வது அறியாது அனைத்து விலங்குகளும் நாம் அனைவரும் இப்போதே இதை இடத்தைவிட்டு செல்லலாம் என தீர்மானித்து. அப்போது, குயில் இருங்கள், நான் ஒரு முறை முயற்சிக்கிறேன் என கூறி வந்தது. மரத்தின் மேலே அமர்ந்தது தன் இனிய குரலில் குவதுடங்கியது. மனிதர்கள் அந்த மரம் பல சிறிய விலங்குகளுக்கு வாழ்விடமாக இருபதை உணர்ந்தனார். அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டனர்.
அனைத்து விளங்கும் குயிலை பாராட்டினார். இப்போது குயிலுக்கு அன்னம் சொன்னது ஞாபகம் வந்தது. அழகு என்பது மனதில் இருக்க வேண்டிய ஒரு குணம்.
நாமும் அனைத்து உயிர்களிடத்தில் உள்ள மனதின் அழகை போற்றுவோம்!