STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Drama Inspirational

4  

Amirthavarshini Ravikumar

Drama Inspirational

காலம் மாறும்

காலம் மாறும்

1 min
274

    ராஜா என்ற பட்டதாரி இளைஞன் வேலை இல்லாமல் தவித்து வந்தான். அவன் சுற்றத்தார் அனைவரும் காலம் வரும்பொழுது அனைத்தும் கைகூடும் என்று ஆறுதல் கூறினார்களே தவிர அவனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. சிலர் கேலி செய்ய ஆரம்பித்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் தானே சுயமாக தொழில் தொடங்க தீர்மானித்தான்.


ராஜா எம்பிராய்டிங் செய்வதில் சிறந்தவர். எனவே அதையே ஒரு தொழிலாக மாற்றிக் கொண்டான். அக்கம்பக்கத்தார் அவனைப்பார்த்து சிரிக்கையில் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். இவன் செய்த எம்ப்ராய்டிங் துணிகளை அருகிலுள்ள ஒரு துணிக்கடையில் கொண்டு காண்பித்தான். அந்தத் துணிக்கடையின் முதலாளிக்கு இவனது எம்பிராய்டிங் பிடித்துப்போகவே இவனுக்கு அவரது கம்பெனியில் ஒரு வேலை வாய்ப்பை தந்தார். சிறிது நாள் அங்கு வேலை பார்த்த அவன், தன் சம்பளத்தை சிறிது சேமிக்க ஆரம்பித்தான்.


இரண்டு வருடம் கழித்து தனக்கென ஒரு சொந்த நிறுவனம் நிறுவினார். அங்கு ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்தான். வாழ்விலும் உயர்ந்தான் அந்தஸ்திலும் உயர்ந்தான். சுற்றத்தார் "உன்னால் எவ்வாறு முடிந்தது? " என்று கேட்க காலம் வரும்பொழுது அனைத்தும் கைகூடும் என்று கூறிவிட்டு சென்றான்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Drama