இத படிக்காதீங்க பய படாதீங்க
இத படிக்காதீங்க பய படாதீங்க
என் மரணம் என்னாலேயே நிகழும், அது எப்டி சாத்தியமாகும்? ஒரு மனிதன் அல்லது மானிடப் பிறவியாக பிறந்த அனைவரும் ஒரு நாள் இறப்பது இந்த உலகில் இயற்கை. ஆனால் அது துர்மரணம், அகால மரணம், மற்றும் பல உண்டு என்பதை ஒரு சிலர் மற்றும் அறிவர்.
அழகான குடும்பத்தில் அனைத்து உறவுகளையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவன் ஒரு இரவில்! இல்லை இல்லை ஒரு நிமிடத்தில் வெளியேறும் தருணம்.
மேல வாத்தியம் முழங்கும் நிகழ்வு அது. மணப்பெண் ஆக இருக்கும் அவள் தன் கணவனுடன் அருவதாம் ஆண்டு திருமண நாளில் மகிழும் தருணம்.
திருமணம் நிகழ்ந்து அன்று மதியம் ஒரு தகவலை தன் கை பேசியில் கேட்டு அழுகிறாள்.
மறுமுனையில் ஒரு நிமிடத்தில் வெளியேறும் அவன் அப்படி என்ன செய்தான்.
தன் தம்பி, தந்தை, தாய் என்று அனைவரும் காரோன-19 என்ற நோயால் பாதிக்கப்பட்ட போது கவனித்து கொண்டான்.
அனைவரும் நலமுடன் வீடு திரும்பினார்கள். அதிர்ஷ்டக்காரன் அவன் தப்பி விட்டான்.
அவனும் தன் கை பேசியில் யாருடனோ பேசிக்கொண்டு மாடியில் இருந்து இறங்குகிறான்.
அந்த ஒரு நிமிடம் தன் கால் தவறி தலைகீழாக உருண்டு விழுகிறான். அந்த கொடூர பேய் அத்தருணம் வெளிவருகிறது. அது என்ன?
தலையில் காயம் அதிகமாக இருந்ததால் மூளை சாவு. அந்த ஒரு இரவு ! இல்லை இல்லை அந்த ஒரு நிமிடம் அவன் இந்த உலகத்தை விட்டு வெளியேறும் தருணம்.
மறுநாள் மேல வாத்தியம் கேட்கும் மணப்பெண் தன் அண்ணன் மகன் இறந்ததை கேட்கிறாள். அவள் என் தாயாக தான் இருக்க வேண்டுமா இல்லை இறந்த அவன் என் மாமாவின் மகனான ( என் அண்ணன்) ஆக தான் இருக்க வேண்டுமா.
எதிரிக்கும் இதை வர்ணிக்கும் தருணம் வேண்டாம்.