இங்கு வன்மம் கக்கபடும்
இங்கு வன்மம் கக்கபடும்
முன்னுரை
“நர்ஸ் கிவ் மீ தி ஸிஸர்ஸ்” என்று டாக்டர் சொன்னார்.
“இந்தாங்க டாக்டர்” என்று கத்திரிகோலை கொடுத்தார்.
இரத்தம் சொட்ட சொட்ட நனைந்த சட்டையை கத்த்ரியை வைத்து வெட்டினார்.
“வூன்ட் இங்க இருக்கு, வெட்டு காயம் போன்ல படல, கீளீன் தி வூன்ட் வித் ஆல்ககால்”
“எஸ் டாக்டர்”.
மெதுவாக நர்ஸ் பஞ்சில் திரவத்தை ஊற்றி அதை வைத்து துடைத்தார்.
“ஐ கேன் ஸீ தி கட் டாக்டர்”.
“பிளட் வராம இருக்க எதாவுது துனிய வச்சு பிரஸர் குடுங்க”
“ஒகே”
“நான் அதுக்குள்ள ஸிடிட்சஸ்கு ரெடி பன்றேன்”
ஐந்து நிமிடத்துக்கு பின்னால் டாக்டர் தையல் போட வந்தார்.
“பல்ஸ் ஒகே தான”
“எஸ் டாக்டர்”.
“ரெடி”
“எஸ்”
**********************************-**********************************-********************************
அந்த பெண்ணுக்கு முப்பத்துஒரு வயது இருக்கும்.
“ஐசியு” என்ற போர்ட் போட்ட் அறைக்கு முன்னால் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.
அவள் மனதிர்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது.
“இவன் பிழைப்பானா?”
“நான் முன்னாடியே இவன கூட்டிட்டு போயிருக்கனும்”
“இவன நான் கைவிட்டுருக்க கூடாது”
“எதுவா இருந்தாலும் என்ன பிரச்சனையா இருந்தாலும் இவனுக்காக கூட இருந்திருக்கணும்”
என்று நினைத்து கொண்டிருக்கும் போதே “ஐசியு” வார்ட் கதவு திறந்தது.
அந்த பெண் டாக்டரிடம் சென்று
“டாக்டர் அவன் எப்படி இருக்கான்”
“நாங்க ஸர்ஜரி பண்ணிருக்கோம், எதுவா இருந்தாலும் இருபத்து நாலு மணி நேரம் கழிச்சு தான் சொல்ல முடியும்”.
“பிழச்சிடுவான்ல”
“கடவுள் கைல தான் இருக்கு”
இன்னொரு நர்ஸ் குறுகிட்டு டாக்டரின் காதில் ஏதொ சொன்னாள்.
“ஐ வில் பி பேக்” என்று சொல்லிவிட்டு டாக்டர் நகர்ந்தார்.
அந்த பெண் வட்ட கண்ணாடி மூலமாக உள்ளே நினைவற்று கிடந்த நபரை பார்த்தார்.
“நீ மட்டும் உயிரோட வந்தா நான் கண்டிப்பா உன்னய அங்க கூட்டிட்டு போறேன்”.
**********************************-**********************************-********************************
அத்தியாயம் ஒன்று : விசாரணை
??????? ??:?? ??
“அவன் பேசுவான்னு நினைக்கிறிங்களா?” என்று இன்ஸ்பெக்டர் ஜான் கேட்டார்.
“டிரை பண்ணி பாப்போம்” என்று ஏட்டையா காளி சொன்னார்.
“சரி உள்ள பொவோம்”.
என்று இருவரும் உள்ளே நுழைந்தனர்.
**********************************-**********************************-********************************
“இன்னிக்கு உன் கோவமெல்லாம் தீர்த்துட்ட அப்டி தான, பன்னிரெண்டு வருஷமா உனக்குள்ள இருந்த கோவம், ஆக்ரோஷம் எல்லாத்தயும் அப்டிதான”
“ஆமாம் எல்லாரும் என்னய ஏமாத்தி இப்டி மாத்திட்டாங்க அதான் மொத்தமா முடிச்சிட்டேன்”
“பைத்தியம் இப்ப எங்க இருக்கன்னு பாத்தியா, இந்த பன்னிரெண்டு வருஷத்துல நான் சொன்னத ஒரு வாட்டியாவுது கேட்டிருப்பியா இல்ல்..கேட்டட்தே இல்ல உன் இஷ்ட ம..”
“ஆமாம்டா என் இஷ்ட ம.. சொல்லு ஏன் நிருத்திட்ட”
இருவரும் எதிரெதிர் உட்கார்ந்து சண்டை போட்டு கொண்டிருந்தனர்.
“அட்லீஸ்ல் நீ ஆசைப்பட்ட.. இத்தனை வருஷம் ஆசைப்பட்ட விஷயம் நடந்துச்சா.. இல்ல”
“……”
“யூ ஆர் எ லூசர்.. லூசர்..”
**********************************-**********************************-********************************
“காளி டாக்டர் கிட்ட கேளு அவன் எப்படி இருக்கான்னு”
“டாக்டர் அவன் எப்படி இருக்கான்”
“கிரிடிகல் கட் டு தி நெக், பிழைக்கிரது கஷ்டம்”
“மரண வாக்குமூலம்”
“காண்ஸியஸ் வரல”
“வேற யாராவுது”
“ஓருத்தர் இருக்காரு, டிரீட்மெண்ட் பண்ணினதுல ஒகே பட் பிளிங்க் மட்டும் தான் பண்ண முடியும்”
“புரியல”
“யெஸ் அப்டினா கண்ண ஒரு வாட்டி சிமிட்டுவாரு, இல்ல அப்டின்னா இரண்டு வாட்டி சிமிட்டுவாரு”
“கேன் வீ சீ ஹிம் டாக்டர்” என்று ஜான் கேட்டார்.
“தாராளமா”
**********************************-**********************************-********************************
“நான் கிளம்பி போறேன், இனியும் உன் கூட இருந்து சாக முடியாது”
“நீ போனா என்னால இருக்க முடியாதுன்னு நினைச்சியா?”
“அப்டியா இனி நான் இங்க இருக்கவே மாட்டேன்” என்று அவன் கிளம்பி அந்த அறையை விட்டு வெளியே போனான்.
“டேய் நில்லுடா” என்று இன்னொரு நபர் கை தூக்கினான், ஆனால் கைவிலங்கு தடுத்தது.
“நான் யாரு எப்படி இங்க மாட்டினேன், இப்ப போன இவன் யாரு”
திடிர் என்று ஒரு ஒலி கேட்டது.
“ஸப்ஜெக்ட் 01.. ஒவர்.. ஒவர்.. கேட்டுச்சுன்னா ரெஸ்பாண்ட் பண்ணுங்க”
“ஐ கேன் ஹியர் யூ ஒவர்.. ஒவர்..”
**********************************-**********************************-********************************
“இன்ஸ்பெக்டர் ரொம்ப நேரம் எடுத்துக்காதிங்க இப்ப தான் இவர் முழிச்சிருக்காரு”
“ஒகே டாக்டர்”
காளி, ஜான், டாக்டர் மூவரும் அவனை நெருங்கினர்.
“ஸார், நாங்க பேசுறது கேட்டுச்சுன்னா ஒரு வாட்டி கண் சிமுட்டுங்க”
அங்கு பல வெட்டு காயங்களுடன் கிடந்தவன் மெதுவாக ஒரு முறை கண் சிமிட்டிணாண்.
“குட்”
“உங்க பேர் பிரசாந்த் தான”
பிரசாந்த் ஒரு முறை கண் சிமிட்டிணாண்.
“குட், உங்கள மதியம் மூனு மனிக்கு அட்டாக் பண்ணிருக்காங்க”
பிரசாந்த் இரண்டு முறை கண் சிமிட்டிணாண்.
“ஸார்” என்று காளி குழம்பினான்.
“ஒகே டைம விட்டு தள்ளுங்க, உங்கள அட்டாக் பண்ணது இவரு தான” என்று ஜான் ஒரு நபரின் போட்டோவை காட்டினான்.
பிரசாந்த் கண் சிமிட்டாமல் அதையே பார்த்தான்.
டாக்டர் “ஸாரி டு இன்டரெப்ட் பட் இவரு கிளாஸஸ் வியர் பண்ணுவாரு” என்று டாக்டர் கண்ணாடியை பிரசாந்திற்கு மாட்டி விட்டார்.
பிரசாந்த் நன்றாக கவனித்து ஒரு முறை கண் சிமிட்டினான்.
**********************************-**********************************-********************************
“குட், உங்க லைப்ல நடந்த ஈவண்ட்ஸ் எல்லாத்தயும் நாங்க ரீகால் பண்ண போறோம், இஸ் திஸ் கிளியர் ஒவர்.. ஒவர்..”
“எஸ் ஒவர்.. ஒவர்..”
“குட் நவ் யுவர் கப்ஸ் வில் பீ ரிலீஸ்ட் அன்ட் ஸம் கார்ட்ஸ் வில் கைட் யூ”
உடனே அவன் கையில் இருந்த விலங்கு கழண்டது, கதவு திறந்து இரு காவலாளிகள் உள்ளே வந்தனர்.
அவன் கையை பிடித்தபோது பலங்கொண்டு ஒரு காவலாளி காலை உதைத்தான்.
இன்னொரு காவலாளி மூக்கில் குத்தினான்.
இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இவன் திறந்திருந்த கதவின் வழியாக ஒட ஆயத்தமானான்.
ஒடினான்,ஆனால் கண்ணாடி போன்ற செவிற்றில் மோதி கீழே விழுந்தான்.
“சப்டூயு ஹிம்”
“ஒகே ஸார்”
என்று இரு காவலாளிகளும் அவனை மறுபடியும் அதே நாற்காலியில் அமர வைத்தனர்.
**********************************-**********************************-********************************
“இவன் தான் அட்டாக் பண்ணிருக்கான்” என்று காளி உறுதியாக நம்ப ஆரம்பித்தான்.
“ஒகே உங்க ஆபிஸ்ல மொத்தம் எத்தனை பேர்” என்று ஜான் கேட்டான்.
“ஸார்..” என்று காளி சொல்ல
“சாரி நான் மறந்துட்டேன்..”என்று டாக்டரிடம் பேனா பேப்பர் வாங்கி ஜான் எழுத ஆரம்பித்தார்.
“ஓன்னுலருந்து இருபது வரைக்கும் எழுதிருக்கேன் ஒன்னுன்னா ஒரு வாட்டி இருபதுன்னா ரெண்டு வாட்டி, தெரியலன்னா மூனு வாட்டி”
பிரசாந்த் இரண்டு முறை கண் சிமிட்டினான்.
“ஒகே”
“இப்போ உன்னய தவிர எத்தனை பேர அட்டாக் பண்ணான்”
“ஸார் அதுதான்..” என்று காளி சொல்ல
“இரு காளி இவன்டயும் கேட்ருவோம், ஒன்னுனா ஒரு வாட்டி, ரெண்டுன்னா ரெண்டு வாட்டி, அதுக்கும் மேலன்னா மூனு வாட்டி”
“ஸார் அதுதான் எல்லாரும்..”
பிரசாந்த் மூன்று முறை கண் சிமிட்டினான்.
“எல்லாத்தயும் பண்ணது இந்த நபர் மட்டுமா இல்ல வேற யாராவுது கூட இருந்தாங்களா, இவன் மட்டும்னா ஒரு வாட்டி..”
“ஸார் அதுதான் எல்லாரம்..”
பிரசாந்த் ஒரு முறை கண் சிமிட்டினான்.
**********************************-**********************************-********************************
“எத்தனை மணி ஆகுது, எழுந்திரிக்க மாட்டியா, எப்பவுமே லேட்
காலைல சீக்கரம் சாப்பிட்டோம்னு இல்ல, எப்பவுமே லேட்”
நான் மெதுவாக பெட்டிலிருந்து கீழே காலை வைத்தேன். எதோ தண்ணீர் போல் இருந்தது. லேசாக பிசுபிசுவென்று ஒட்டியது.
உள்ளங்காலை தூக்கிப்பார்த்தேன் இரத்தம், ஆனால் என்னுடய இரத்தம் இல்லை. இரத்தம் வந்த வழியை பின் தொடர்ந்தேன்
“டேய் எந்திரிக்க மாட்டியா..?”என்று ஒரு குரல் கேட்டது.
இருதியில் ஒரு சடலத்தில் இருந்து இரத்தம் வந்திருந்தது.
“இங்க என்ன பண்ற” என்று என் பின்னால் ஒரு குரல் கேட்டது,
திரும்பி பார்த்த போது கதவருகே நின்ற பெண்ணும் சடலமும் ஒரே நபர்.
இருவரயும் திரும்பி பார்த்தேன்.
சடலம் திடிர் என்று “டேய் எந்திரிக்க மாட்டியா..?” என்று குரல் கேட்டது.
திரும்பி பார்த்த போது கதவருகே நின்ற உருவம் இல்லை.
திடிர் என்று என் மேல் மெல்லிய துனி பட்டது.
திரும்பி பார்த்தபோது ஒரு கோர உருவம்.
அலறி கீழே விழுந்தேன், இரத்தத்தில் வழுக்கி எழுந்து வாசல் பக்கம் ஒடினேன்.
வாசலை திரக்க முயர்ச்சித்த போது அது திறக்கவில்லை, மாடி படி ஏறி மாடிக்கு சென்றேன்.
ஒரு ஒரமாக ஒண்டினேன், அந்த உருவம் என்னை நெருங்கியது.
கழுத்துடன் தூக்கியது, என்னால் அதனை எதிர் கொள்ள முடியவில்லை.
என்னை மாடியிலிருந்து கீழே போட்டது.
கண்கள் மயங்கின, ஆனால் தரையில் விழ வில்லை.
ஒரு சுழல் ஒன்றில் சுழன்றென்.
இருதியாக நினைவிழந்தேன்.
“ஸ்ப்ஜெக்ட் 01, எழுந்திரிங்க”.
**********************************-**********************************-********************************

