srinivas iyer

Action

3  

srinivas iyer

Action

சாதாரண டிக்கெட்

சாதாரண டிக்கெட்

1 min
205


சாதாரண டிக்கெட் விலையில் ஒருவர் தனி ஆளாக விமானத்தில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு பயணம் செய்துள்ளார். அது குறித்து நீங்கள் தனியாக ஒரு விமானத்தில் பறக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளீர்களா? பொதுவாக அப்படி பறக்க வேண்டும் என்றால் சொந்தமாக  விமானம்   வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் குறைந்தது விமானத்தை வாடகைக்கு எடுக்கும் அளவிற்காவது நம்மிடம் பணம் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாதவர்களுக்கு அது பெரும் கனவு தான்.


ஆனால் சமீபத்தில் ஒருவர் சாதாரண டிக்கெட்டில் தனி ஆளாக விமானத்தில் இந்தியாவிலிருந்து துபாய் வரை பறந்துள்ளார். ஐக்கிய அமீரத்தில் வாழும் இந்திய தொழிலதிபர் எஸ்பி சிங் ஓபராய் இவர் அவ்வப்போது இந்தியாவிற்கும் துபாய்க்கு அடிக்கடி பயணிப்பவர். தற்போது துபாய் நாட்டு கொரோனா விதிமுறைகளின் படி அந்நாட்டு குடிமகன்கள், அந்நாட்டிற்கான கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து துபாய்க்கு பயணம் செய்ய முடியும்.


இதனால் மிக குறைவான பயணிகளே இந்தியாவிலிருந்த தற்போது துபாய்க்கு பயணித்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பி சிங் தான் துபாய் பணிக்க டிக்கெட் புக் செய்தார். அவரது பயண நேரம் இந்திய நேரப்படி அதிகாலை 3.45 மணியாக இருந்தது. காலையில் அவர் விமானத்திற்குள் சென்றது தான் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. விமானத்தில் அவரை தவிர வேறு யாரும் இல்லை அவர் விமானப் பணி பெண்களிடம் இது குறித்து கேட்ட போது அவர் தான் அந்த விமானத்தில் தனி ஆளாக பயணிக்க போகிறார் என கூறியுள்ளனர். இதை கேட்டதும் எஸ்பிசிங்கிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அடுத்த முறை இப்படி தனியாக பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நிராகரித்து விடுவேன். வாழ்வில் ஒருமுறை அனுபவிக்கலாம். ஆனால் மீண்டும் மீண்டும் இப்படி பயணிக்க போர் அடிக்கும். என கூறினார்.


Rate this content
Log in

Similar tamil story from Action