STORYMIRROR

KANNAN NATRAJAN

Inspirational Others

3  

KANNAN NATRAJAN

Inspirational Others

அனுமன்

அனுமன்

1 min
184

 ராம பிரானே! சீதாதேவியை ஏன் இப்படி தொலைத்துவிட்டு நிற்கிறீர்?

அவள் மாயமான் கேட்டாள். 

அவர்களே குழந்தை! எப்பதான் சுயமாக முடிவு எடுக்கப்போகிறீர்கள்? தாய்,தகப்பன் பேச்சைக் கேட்பது முறைதான். அதற்காக கானகம் என்றால் என்ன என்று தெரியாத சிறு பெண் குழந்தையைக் கூட்டிக்கொண்டு வருவார்களா? வருங்காலத்தில் இந்த மாதிரி சொன்னால் பெண்ணைப் பெற்றவன் டைவோர்ஸ் பண்ண வைப்பான்....என்னைக்குத்தான் இந்த ஆண்மக்கள் சுயமாக முடிவு எடுப்பார்களோ!

நீ பிரம்மச்சாரி! அதுதான் பேசுகிறாய்! ஒழுங்காக சீதை இருக்கும் இடத்தைத் தேடிப்பார்! 

இந்த இராமாயண காலத்துல வேதம் படிச்சுட்டதால காற்றில் பறந்து சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சுடுவேன். இராவணனையும் நீங்க வதம் செய்வீங்க! இதுதான் விதி! ஆனால் வருங்காலத்தில் 2020இல் நீங்கள் மறுமுறை பிறக்கும்போது நான் இருக்க மாட்டேன். ஃபோட்டோவில்தான் சிரஞ்சீவியாக இருப்பேன்! அப்ப என்ன செய்வீங்க?

அப்பவும் இப்படித்தான் மனைவியைத் தொலைத்துவிட்டு நிற்பேனா அனுமன்! என இராமன் மெல்லிய குரலில் கேட்க, அனுமனோ மௌனமானார்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Inspirational