வலியும் நீயே? மருந்தும் நீயே?
வலியும் நீயே? மருந்தும் நீயே?
காணா தூரம் சென்றாய் சரி..
ஆனால் ஏன் வலிக்கிறது எனக்கு???
வேண்டாம் என்ற என்னிடம் வழிப்பறி கொள்ளையன் போல மனம் திருடி சென்றாய் சரி..
ஆனால் வேதனைகள் எதற்கு???
உன்னை மறவாமல் இருக்கவா?
இல்லை.... உன் மீது கொண்ட நம் காதல் மறையாமல் இருக்கவா?
வடுவாக மாறிய காயத்திற்கு
வலி நிவாரணியாக நீயே வந்துவிடு
உன் கண்களை ஒருமுறையேனும் காண காத்திருக்கும் உன்னவள்