STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Romance

4  

Kalai Selvi Arivalagan

Romance

விருந்தாகிட.....

விருந்தாகிட.....

1 min
393


என் கண்களுக்குள் நீ 

என் எண்ணங்களுக்குள் நீ

என் கனவுகளுக்குள் நீ

என் உணர்வுகளுக்குள் நீ

உன் இதழ்களின் இனிமையில்

தினமும் நான் மயங்கிட

என் தோள்களில் மயிலிறகின் 

மென்மையாய் மெல்ல நீ

தலை சாய்த்து உறங்கிட

என் காதுகளில் ஒலிக்கும்

உன் மூச்சின் நாதத்தில்

நனவாகிய பொழுதுகளில் 

யாருக்கு யார் விருந்தென்று

நிலவொளியில் சிரித்திடும்

மல்லிகை மலர்களின் வாசமாய்

நம் காதல் வாழ்வு மாறுமோ?

மண்ணின் மணத்தினில்

சட்டென கிளம்பும் 

மழையின் வாசமாய் நீ

இன்று எனக்கு மாறியது

உண்மை தானா இனியவளே



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance