STORYMIRROR

தினேஷ் கண்ணா

Abstract Fantasy Inspirational

4  

தினேஷ் கண்ணா

Abstract Fantasy Inspirational

வேள்பாரி

வேள்பாரி

1 min
240

வீரயுக நாயகன் வேள்பாரிபற்றி சில வரி கவிதைகள்


வேளீர் குல தலைவனே! 

குறிஞ்சியின் குல மகனே!

இயற்கையை காத்த பாரிவேளே!

அனுஅளவேணினும் பிற உயிர் வாடிணும் விரைந்து காக்கும் தொல்குடி தலைவரே! 

குறுமன்னாயினும் மூவேந்தர்களை எதிர்த்த மூத்த வேந்தே! 

வேந்தே ராயினும் பணிந்தால்

மட்டும் பிடிகொடுக்கும் குறிஞ்சி தலைவனே! 

மாமன்னரே வந்தாலும் தன் மாண்பு குலையா பெருங்குடி மன்னவரே!

 இயற்கையை காத்த ஈகையின் வேந்தே!

இன்னல்கள் பல தாண்டி தன் மக்களை காத்த இனத்தலைவனே! 

கபிலரின் மீது கள்ளமிள்ளா நட்பினை கொண்ட அறத்தின் கூர்வேளே! 

அதிர்ந்து கேட்டால் கொடுக்கமால் பணிந்து கேட்டால் வாரி வழங்கும் பாரிவள்ளலே!

பனையினை குலச்சின்னமாக கொண்ட பனையின் மகனே!

குறுமன்னரே ஆயினும் மூவேந்தர்களின் கண்ணை உறுத்திய முழுமுதல் வேந்தே!!!


உங்களின்

🙏🌸தினேஷ் 🌸🙏



Rate this content
Log in

Similar tamil poem from Abstract