ஊரடங்கு
ஊரடங்கு


காவலன் பிடிப்பான்
என்று கூறியும்
விடாது வெளியே
திரியும் மனித
ஜென்மங்கள்
திருந்துவதால் மட்டுமே
ஊரடங்கு விலக்கு!
பாட்டியின்
மாத்திரைப் பை காலியாகிக்
கிடக்க தாத்தாவின்
பென்ஷன் பணம்
வாங்க வண்டிக்கு இனியும்
அதிகப் பணம்
கொடுத்துக்கொண்டே
தான் கல்லறைக்குப்
போக வேண்டுமா!
தெருவில் திரியும்
மாக்களே!
மதுவின் பிடியில்
நீங்கள் சிக்கி
உயிரை இழப்பதோடு
மட்டுமல்லாமல்
பெண்களின் மஞ்சளை
அழிக்கத் தயாரா!
ஒருநாள் கடையடைப்பு
உலகில் பல கோடி
நஷ்டம் என்றால்
பலநாள் ஊரடங்கு என்றால்
யாருக்கு நஷ்டம்
என்று உணர்ந்திடு தோழா!
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்
மட்டும் போதாது சகோதரா!
மருத்துவமனை ஊழியர்களும்
அரசு அலுவலர்களும்
மட்டுமே ஊரடங்கில்
தளர்த்தப்பட்டவர்கள்
என்றால் அவர்களுக்கு
முன்னுரிமை அளிப்பதும்
நமது கடமையன்றோ!
ஆறறிவுள்ள மனிதனே!
ஒழுக்கத்துடன்
வெள்ளைப்புறாக்களின்
மனமும் ஒருங்கிணைந்தால்
மட்டுமே உலகில்
உனக்கு இறைவன் அளித்த
அன்பாசனத்தில் அமர முடியும்!