Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

SHIVANI PRIYANGA

Romance Tragedy Classics

4  

SHIVANI PRIYANGA

Romance Tragedy Classics

உன் சாபங்களில் இருந்து உன்னை காத்து கொள் காதலா!

உன் சாபங்களில் இருந்து உன்னை காத்து கொள் காதலா!

2 mins
700


பருவம் புரியாத பள்ளி படவேலையில், பார்வை கொண்டு போர் தேவையா? ஒரு சமுகவலைத்தளம் சென்று, சமூகம் மறந்தது இந்த பாவையா? நூல் கொண்டு முகம் மறைத்த வேளையில், முக நூலில் என்னை மறந்தேன், உன்னை அறிந்தபின்! சமூகவலைத்தளம் என்னும் சமுத்திரத்தில் சேரும் முகநூல் என்னும் நதியில் நீ காதல் என்னும் தூண்டிவிட, அதில் சிக்கிக் கொண்ட கயல் நானோ? உன் தூண்டில் அசைவுக்கு இணங்க, நானும் உன் தரையில் துடிக்க துணிந்தேனா? நீ என் முக்கலமாக மாறி என் உலகம் சுற்றி வந்து புவியை மயக்கினாயோ???


மன்னா.... என் உலகமே.... என் கவியே.... என் மோட்சமே.... என் உயிரே.... நீயே அணைத்துமானாய்! என் தந்தை நித்திரை கண்ட போது, தாலாட்டு பாடி தாயனாயே! என் சொந்தமே.... எனக்கு மட்டுமே சொந்தமே... உன்னை பிரிய என்னால் எப்படி முடியும் பிரியமானவனே! என் வார்த்தை கேக்காமலே; என் வாழ்க்கை சொல்வாய்! உன் வாக்கு என் நாவில் கொண்டு நடந்து கொண்டாயே... உன் அன்புக்கு அடிமையாய் இருந்த என்னை உன் அடிமையக்க நினைத்தாயோ!


நீ கூறும் சொல்லுக்கு தலையாட்டி தலையாட்டும் பொம்மை ஆனேனோ... நீ தான் என்னவன் ஆயிற்றே என்று மன்னித்தேனா... இல்லை, மறைக்க துணிந்தேனோ! நல்லவன் உன்னை நஞ்சகன் மாற்ற, நண்பன் என்று நம்பினாயோ... என்ன நினைத்தாயோ? இல்லை, என்னை தான் நினைத்து பார்த்தாயோ??? எங்கிருந்து வந்தளோ... வந்தவள் போனாள் உன்னையும் கூட்டிக்கொண்டு... உண்மை மறந்து, உண்மையை மறைத்தாயோ!


நீ ... நீயா ... நானல்லவா.... என்னிடம் மறைக்க நினைத்தாயோ.... உன் துணைக்கு துணை தேட தைரியம் கொண்டாயா துணைவா..... நான் அறிந்தபின், மன்னிப்பு என்னும் மந்திரத்தின் மனம் மறந்தாயோ.... மனவளானே .... மீண்டும் தொடர்ந்தாயே.... காதலியின் கற்பை பற்றி பேசினாயே.... உன் காதலின் கற்பு என்னானது.... கற்று தந்த பாடங்கள் ஒன்றா ரெண்டா.... மனித இயல்பு மாற செய்தாய்... மன்னிக்க மறுத்தேன்....


என் விருப்பம் போல் துணி்ந்தேன்! நண்பனை நம்பினேன்... தோழிகளாய் சில தெய்வங்கள் கிடைக்க, உன்னை பலி கொடுத்து, என் பாவம் தீர்க்க போகிறேன்! உன்னை துறந்து புனிதமடைய முயல்கிறேன்... போய்விடு, போய்விடு, என்னை விட்டு போய்விடு; இனி என்னிடம் மன்னிப்பு கிடைக்கும் என்று எண்ணாதே... வேறு பெண்ணுக்கும் மீண்டும் இதையே செய்யாமல் இருந்து, உன் சாபங்களில் இருந்து உன்னை காத்து கொள்ள காதலா!


Rate this content
Log in

Similar tamil poem from Romance