பூவுக்கு உவமையாய் என்னவன்
பூவுக்கு உவமையாய் என்னவன்
பலவகை நறுமணம்
தரும் பூக்களே...
உங்களை எல்லாம்
பெண்களுக்கு தான்
உவமையாய் சொல்ல
வேண்டுமோ???
என்னை பூப்போல
பார்த்து கொள்ளும்
என்னவனை...
என்னை கண்ணின்
இமை போல
பாதுகாக்கும்
என்னவனை...
என்னை அன்பு
மழையில்
நனைய வைக்கும்
என்னவனை...
என்மேல் கொண்ட
காதால் என்னிடம்
குழந்தையாய்
மாறிப் போகும்
என்னவனை...
என் அனைத்துமாய்
இருக்கும் என்
என்னவனை...
பூவுக்கு உவமையாய்
நானும் என்
என்னவனை
சொல்ல கூடாதோ???

