பிறவி
பிறவி
விடுதலை பெற்ற
ஆன்மாவின்
எல்லைகள் அற்ற
அன்புக்கு
ஏங்கும் தசைகளை
தாங்கச் சென்று
கட்டுண்டு
எல்லைகள் சுருங்கி
யாக்கையின் கசடால்
ஆன்மாவே
தன்னை மறந்து
உடலையே
உண்மையென நம்பி
பிறப்பின் இறுதியில்
வாழ்வதைப் பற்றிய
ஆசையால்
வருவதே மறு பிறப்பு!
மறு பிறப்பில்
முற் பிறப்பின் மறதியால்
மீண்டும் மீண்டும்
இதே பயணம்!
பயணம் முடியுமா?
உடல் மறந்து
உள்நோக்கின்
உறுதியாய் முடியும்!