பெண்ணே
பெண்ணே
பெண்ணே! உன் வதனம்
தாமரை மலரோ?
பவுர்ணமி நிலவோ?
தாமரை மலரில் பிறைநிலவோ?
கணைத் தொடுத்திடும் வில்லோ?
கயல் கொடுத்திடும் குளமோ?
வேலி கொண்ட வயலோ?
வயலைச் சுற்றி பளிங்குத் தரையோ?
முத்துப் பெட்டகமோ?
மோகம் தரும் மதுரசமோ?
கொவ்வைச் செவ்விதழோ?
மா துளையோ? மதுரச ஊற்றோ?
மயக்கும் செவ்விள நாற்றோ?
ஏ பெண்ணே!
நொடிப் பொழுதில்
காதல் கணைத் தொடுக்கிறாய்!
கணப்பொழுதில் காதல்
நாணை ஏற்றுகிறாய்!
நாடி நரம்பை மீட்டி வீணை இசைக்கிறாய்!
விழி அசைவில் எனை அசைக்கிறாய்!
சிலையே! உனக்கு இல்லை விலையே!
