ஒரு துளி
ஒரு துளி
நாம் பிறந்தவுடனே அன்னையின் அன்பு துளி
நம் பசியை ஆற்றும் அந்த ஒரு துளி நம்மை
நமே உணர செய்யும், நெகிழ்ச்சியான தருணம் அது.
நாம் வளரவளர உண்ணும் உணவும் பருகும் நீரும்
நம் பசியை ஆற்றும் அது நாவின் சுவையையூம்
வயிற்றின் பசியையும் போக்கி மகிழ்விக்குக்கும்.
அப்படியான தண்ணீரையும் உணவையும் நாம்
எப்படி போற்ற வேண்டும்?
எவ்வாறு உயர்த்தி போற்றினாலும் அது மிகையாகாது.
நாம் பருகும் தண்ணீரை வீணாக்காமல்
அதை பயன்படுத்தி பயன்பெற்று
பாதுகாத்து சேமிப்போம்.
நாம் சேமிக்கும் ஒவ்வொரு நீர் துளியும்
நம்மையும் நம் சந்ததியையும் காக்கும்.
ஒரு துளி என்று எதையும் வீணாக்கவேண்டாம்
அந்த ஒரு துளி நம் உயிரை காக்கும் சக்தியுடையது.
இந்த தண்ணீர் தினத்தன்று நாம் அனைவரும்
நீர் வளத்தை பேணுவோம் பாதுகாப்போம்!