ஒன்றுபட்டு நன்று செய்வோம்
ஒன்றுபட்டு நன்று செய்வோம்
இனத்தால் வேறுபட்டாலும் இணைந்து பயணிப்போம்..
மதங்களால் விலகிநின்றாலும்
ஆன்மீகத்தால் அரவணைப்போம்
மொழியால் கூறுபட்டாலும்
வழியெங்கும் கைகோர்ப்போம்..
நிறத்தால் மாறுப்பட்டாலும்
செயலால் ஒன்றிணைவோம்
உடலால் பிரிந்திருந்தாலும்
உள்ளத்தால் இணைந்திருப்போம்
சாதியால் பிளவுபட்டாலும்
மனிதனாய் சேர்ந்திருப்போம்...
இரா. பெரியசாமி
