STORYMIRROR

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Classics Inspirational

4  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Classics Inspirational

ஞாயிறு பாடம்

ஞாயிறு பாடம்

1 min
564

முதல்நாள் மாலையில்

குருதிச் சிகப்பில்

வண்ணக்கோளமாய்

அரபிக்கடலில்

மூழ்கிய ஞாயிறு 


மறுநாள் காலையில்

தங்கப்பந்தாய்

ஒளிர்ந்து எழுகையில் 

வங்கக்கடலிலை

தங்கக்கடலாய் மாற்றிடுமே..


மூழ்கிடும் வேளையில்

ஒளிர்ந்திடும் கதிரவன்

சிரித்திடும் அழகினை

சிவந்த முகத்தில் 

பார்த்து மகிழலாம்..


எழுந்திடும் போதும்

பொன்னிற பகலவனை

மின்னிடும் உருண்டையாய்

கிழக்கு அடிவானில்

கண்டு நெகிழலாம்...


கோடையில் நடுப்பகல்

சூரியன் வெம்மையின்

தாக்கத்தைப் போலே மனதெழும் 

கோபம் தன்னையும் தாக்கி

சூழ்ந்த உறவுகளையும் தாக்கிடுமே..


மனிதா...

காலையில் கதிரவன்

சிரிப்பிடமும்

மாலையில் பகலவன்

அழகிடமும்

சிரித்து மகிழ்ந்திடக் கற்று

பழகிக்கொண்டால்

வாழ்க்கையிலென்றும்

மங்களம் நிரம்பி 

மங்காமல் ஒளிவீசும்..


 




 






ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil poem from Abstract